Tuesday, January 8, 2013

முடியாது



பகல் கனவுகள்...
கண்டு வாழத் துடிக்கும்...
உலகத்தில்...
நானும் சேர்ந்துகொண்டு...
நித்திரை மாதிரி...
நடிக்கின்றேன்...
நினைவுகள் இருந்தும்...
நீந்திக்கரை...
சேர்வதற்காகவே...!!!

போர்த்திக்கொண்டு...
புதையல் தேடுகின்றேன்...
வேர்த்து நான்...
அறியாமலேயே...
வாழத் துடிக்கின்றேன்...
நேற்றைய கனவில்...
நாளைய தினத்தை..
மறந்து தான்
போகின்றேன்...
நாற்றம் அடிக்கும் முன்னர்...
விழித்துக் கொள்ளத்தான்...
நினைக்கின்றேன்...!!!

உதாரணங்கள்...
எனக்குள்ளேயே...
நிறைந்து மறைந்து...
கிடக்கின்றன...
மனதாலேயே...
தினம் தினம்...
அளந்து பார்க்கின்றேன்...
மறைந்து...
திசைமாறிப்-
போவதால் தானோ...
என் கால்களும்...
தடுமாறிப்போகின்றனவோ...!!!

No comments:

Post a Comment