உள்ளத்தில்...
வைத்துக்கொண்டு...
உடலால்...
காட்டத் துடிக்கும்...
மனிதனே...!!!
வாழத் தெரியாது...
பிதற்றுக்கின்றாயா...
இல்லை வாழ்வே....
பிடிக்காததினால்...
துடிக்கின்றாயா...!!!
பத்து மாதம்...
நீயும் தானே...
கருவறை கண்டாய்...
உன் வாழ்வு மட்டும்...
கானல் நீராகப்....
பாய்வது....
எதனால் தானோ...!!!
கூக்குரல் உனக்கு...
சொந்தாமாகி விட்டதா...
கேட்கும் காதுகளும்...
செவிடாகிவிட்டதா...
உன் கைகளும்...
முடமாகி விட்டதா...
கால்கள் கூட...
நடை தளர்ந்து விட்டதா...!!!
வாழப் பிறந்த...
உலகத்தில்...
உனக்கெதற்கு...
சோகமும் வறுமையும்...!!!
வாழ்ந்து பாரடா மனிதா...
வறுமை...
உன்...
பொறுமையால் தானே...
உன்னை சுற்றுகின்றது...!!!
பொங்கியெழு...
அதுவே பதுங்கி...
ஓடிவிடும்...
உன் சீற்றத்தின் முன்னே...
மண்டியிடும்...!!!