Wednesday, June 19, 2013

நிரந்தரமற்ற...!!!



எது தான்...
நிரந்தரம்...
எல்லாமே ஒரு...
சூனியம் தானே...!!!

எதுவுமே...
நிலைக்கவில்லையே...
நிம்மதி கூட...
தடுமாறுதே...
என்னவென்று...
புரியவில்லை...
ஏக்கத்தில் காலங்கள்...
மட்டும் கழிகின்றதே...!!!

வசந்தக் காற்றுக்கள்...
வழிமாறிப்...
போய்விடுகின்றனவே...
பாச நினைவுகள்...
தடுமாறி சிரிக்கின்றனவே...
என்ன காலமோ...
மனிதன் வாழ்வில்...
சோதனை தரும்...
போதனை காலங்களா...!!!

வார்த்தை இன்றி...
தவிக்கின்றேனே....
வாதம் செய்ய...
மனமின்றி துடிக்கின்றேனே...!!!

மனிதர்களிடம்...
மோதுவதை...
வெறுக்கின்றேனே...
வாழும் வரை....
கை குலுக்க தான்...
நினைக்கின்றேனே...!!!

என்ன தான்...
வாழ்க்கையடா...
தினம் தினம்...
ஏதோ ஒரு புழுக்கம்...
என்னை கொல்லுதே...!!!

எதுவுமே...
நிரந்தரமில்லையே...
எனக்குள் மட்டும் ஏன்...
இந்த போராட்டமோ...
வாழும் வரை...
மனிதனாக வாழ்ந்துவிட்டு...
போவோமே..
வாழும் வரைக்கும்...!!!

அன்புக்கு நான் அடிமை...!!!



ஏதோ புரியவில்லை...
விரோதியாகிலும்...
அவர் கஷ்டத்தில்...
துடிக்கும் பொழுது...
என் மனமும்...
மயங்கி...
துடிக்கின்றதே ...!!!

கொடுமைகள்...
மறக்க முடியவில்லை...
கொண்ட லட்சியம்..
துறக்க முடியவில்லை...
இருந்தும் ஏதோ...
ஒரு வலி என்னை...
துன்பப்படுத்துகின்றதே...!!!

பழக்கப் பட்ட....
வழிகளால்...
பரிதவிக்கின்றேனா...
இல்லை...
என் இதயமே...
மற்றவருக்காக....
துடிப்பதால்....
மயங்குகின்றேனா...
மாற்ற முடியவில்லை...
என் வழியை...
மாற்ற முடியவில்லை...!!!

இந்த உலகில்...
எதனைக் கண்டோம்...
எங்கே...
விரோதம் கொண்டோம்...
காற்றடைத்தை...
பைகளில்...
கர்வங்கள் தான் எதற்கோ...!!!

வாழும் வரைக்கும்...
நான் அடிமை தான்...
என்றும் அன்புக்கு...
அடிமையானவன்...
எனக்கு பிடித்ததும்...
அந்த வழியே...
அப்படியே...
வாழ்கின்றேன்...!!!

மாயக் கண்ணாடி...!!!




அகலக் கால்கள்...
அவதாரம்...
எடுக்கின்றனவே...
நினைவுகள்....
இறக்கைகட்டிப்...
பறப்பதால் தானோ...!!!

சோலைகள்...
நிறங்களை...
மாற்றிக் கொள்கின்றனவே...
என்னதான் வெறுப்போ...
யார் மேல தான்...
இந்த கசப்போ...!!!

புதிய மேகங்கள்...
புதிதாய்....
பிறக்கின்றனவே...
ஓசைகள் வந்து
என்ன தான் ...
தரப் போகின்றனவோ...!!!

முதுமைகள் கூட...
முகம்...
சுழிக்கின்றனவே...
இளமையில்...
என்ன தான் குறைகள்...
கண்டு கொண்டனவோ...!!!

வாழ்வில்...
ஏதோ ஒரு வருத்தம்...
வாதம் செய்து தான்...
நாட்களும் நகர்கின்றதே...!!!

மதிகள் மயங்கி...
விதிகள் மீது...
விடும் அம்புகள்...
எதனை சாதித்து...
உலகை திருத்த...
முயல்கின்றதோ...
யார் அறிவர்...
இந்த மாய...
உலகைத் தான்...!!!

ஏதோ ஒன்று ...
நடந்து கொண்டு தான்...
இருக்கின்றனவே
விம்பங்கள்...
பட்டுத் தெறித்து.-
புதுமையாக மனங்களை...
மழுங்கடித்து...
போதையை...
ஏற்றிக்கொள்கின்றனவே...
எல்லாமே...
ஒரு மாயம் தானே...!!!

அனுதாபம்...!!!





பாவம் என்ற...
சொல்லின்...
மொத்த...
வடிவம் தானே...!!!

பரிதாபம்...
என்ற அகங்காரம்...
எத்தனை வேதனை...
யாருக்கு புரியும்...
இந்த சோதனை...!!!

மனதால்...
துடிப்பதை...
வேடிக்கை...
பார்ப்பது போல் ...
வேஷம் போட்டு...
குத்திக்காட்டும்...
பாங்குதான்...
இந்தப் பதமா...!!!

வாய்கள் மெல்ல...
அவல்கள்...
சிதறிக்கிடக்கின்றனவே...
எடுத்து மென்று...
உவகை கொள்ளுங்கள்...!!!

ஆசையான ...
வார்த்தைகள்...
உதிர்க்க தெரியாத...
கோழைகள்...
ஆதங்கம் போல் நடித்து...
வார்த்தை ஜாலத்தால்...
மனதை தின்னும்...
உள்ளங்கள் தான்....
எத்தனையோ...!!!

பாவம் பரிதாபம்....
யார் மேல...
யாருக்காக வருமோ...
யாரை எண்ணி...
துடிக்குமோ யார் ...
அறிவார்...!!!

அனுதாபம்...
மகிழ்ச்சியை கொல்லும்...
மகத்தான கருவியே...
என்று புரியாத...
உள்ளங்களுக்கு...
புதுமைகள்..
எப்படி புரியுமோ...
புரியாத புதிராகவே...
தொலைந்து போகட்டும்...!!!

விடை தெரியாத பயணம்...!!!


ஊர்ப் பருந்து ...
வட்டமடிக்க...
உவமைகள் வந்து...
முட்டி மோத...
காரணமில்லா...
கவிதைகளும்...
பட்டுத் தெறிக்க...
பயணங்கள்....
எங்கே தான் ...
தொடர்கின்றதோ ...!!!

நேற்று முளைத்த...
காளான்கள்...
கண்ணைப் பறிக்க...
கதைகள்...
பல வந்து...
காதோரம்...
சீண்டி செல்ல...
விடை தெரியாது...
ஏனோ...
நானும் துடிக்க...
காலங்கள் ஓடுதே...
கண்ணைக்...
கட்டிக்கொண்டே...!!!

முல்லைக்கு ..
தேர் கொடுத்த...
மன்னவன் அன்றோ...
முதுகில் சவாரி...
செய்யத் துடிக்கும்...
உள்ளங்கள் இன்றோ...!!!

கல்லுக்குள் ஈரம்..
தேடுகின்றேன்...
இல்லை என்று
தெரிந்தும்...
என்னை மறந்து...
ஏன் தானோ...
வாடுகின்றேன்...!!!

விடைகள் தெரியாத...
பயணங்கள்...
என் வாழ்வில்...
பழகிப் போனதே...
இருந்தும்...
பயணிக்கின்றேன்...
தினமும்...
ஏதோ ஒரு...
நம்பிக்கையில்...!!!

மனம் போன போக்கில்...!!!



உலகில்...
கட்டி வைக்க...
முடியாத மனதால்...
தினம் தினம்...
வாடுகின்றோம்...!!!

ஏதோ...
ஒரு போக்கில்...
அறியாமையில்...
அகலக் கால்கள்....
பதித்து...
அடங்கிவிடுகின்றோமே...!!!

யார் போட்ட சாபமோ....
யாருக்காக....
நாங்கள் போடும்...
வேஷமோ...!!!

தெரிந்துகொண்டும்...
தெரியாதது போல்...
வாழ்வது....
யார் குற்றமோ...!!!

குணங்கள் அறியாது...
மனதில் போடும்...
பந்தங்கள் ...
சொந்தாமாகிவிடுமா...!!!

சோதனைகள்...
தினம் தானே...
வேதனைகளாக...
பிறந்து விடுகின்றனவே...!!!

சாதனைகள்...
என்ன தான் செய்தோம்...
நிம்மதி மூச்சை...
விட முடியாது...
தவிக்கின்றோமே...
சிந்தித்தோமா...
யாரால் எதற்காக ...
ஏங்குகின்றோம்...
எதனை தொலைத்து விட்டு...!!!

மனம் போன...
போக்கில் போய்த்தான்...
பழகி விட்டோம்...
வரும் சோதனைகளை...
சுமப்பதில்...
என்ன தான் தவறை...
கண்டு விட்டோம்...!!!

வாழ்வோம்...
வாழ்ந்து பார்ப்போம்...
வாழும் வரை...
போராட்டத்திலேயே...!!!

வெறுத்துப் போன மனசு....!!!




வாழ்வில்...
வசந்தம் மட்டும்...
வீசிக்கொண்டு...
இருந்ததே...
திடீர் என்று வந்த...
புயல் காற்றினால்...
எல்லாமே திசை மாறி...
சிதைந்து விட்டதே...!!!

தேடிச் சென்று...
புயலை...
அணைத்துக் கொண்டேனா...
இல்லை...
விதி வந்து...
விளையாடியதால்...
என்னை....
அழித்துக் கொண்டேனா...!!!

வாழ்வில் எதையோ...
பறிகொடுத்தது போல்...
உணர்கின்றேனே...
தனிமையை தேடித் தேடி...
அணைத்துக்...
கொள்கின்றேனே...!!!

மாசு பட்ட மனசு போல்...
பிதற்றுகின்றேன்...
மனதால் கெட்டது...
நான் தான்...
என்று...
கொஞ்சம் தேற்றுகின்றேன்...!!!

யாரிடமும்....
எதற்கும் பணியாத....
என் குணமோ...
இன்று...
குற்ற உணர்வில்...
துடிக்கின்றதே...
என் மனதை...
யார் தான் அறிவாரோ...!!!

வெறுத்துப் போகின்றேன்...
மனதால் தினம் தினம்...
தனிமையில்...
என்னை தள்ளிவிட்டு...
வேடிக்கை பார்க்கும்...
மனிதர்களிடம்...
தோற்றுப் போகின்றேன்...
என் வாழ்வின்...
என்னை பக்குவப் படுத்தும்...
பாடமாகவே...
ஏற்றுக்கொள்கின்றேன்...!!!

நானும் மனிதன்...!!!



காலங்கள் ...
துரத்திய வேளைகளில்...
கண்ணீர்களும்...
கதைகளும்...
என்னை தேடியே...
தொடர்ந்ததே...!!!

எத்தனை வேசங்கள்...
எனக்குள் பிறந்து...
மறைந்ததே...
தினம் தினம் மீண்டும்...
பிறந்து கொண்டு தான்...
இருந்ததே...!!!

காலையில்...
எழுந்தவுடன்...
கனவுகள் மறந்து...
போடும்...
வேசங்கள் தான்...
எத்தனை எத்தனையோ...!!!

சுமைகள் வந்து...
சுதந்திரத்தை...
விழுங்கி செல்கின்றதே...
மனசுமைகள் கூட...
என்னை...
மாற்றத்...
துடிக்கின்றதே...!!!

பளுக்களில்...
வாழ்ந்து...
பழக்கப் பட்டவன்...
பாசத்தால் வந்த...
வடுக்களில் கூட...
என்னை...
பல தடவை...
தொலைத்து...
கண்ணீரில்...
குளிக்கின்றேனே...!!!

மனித வாழ்வோ...
மகத்தானது தான்....
எங்களை...
மறந்து வாழ்ந்து...
தொலைக்கின்றோம்...
வாழத் தெரியாத...
கனவுகளால்...!!!

நானும்...
மனிதன் தானே...
பயணம் செய்கின்றேன்...!!!

பாதைகள்...
கரடு முரடாக...
என்னை...
கவிழ்க்க பார்க்கின்றதே...
இருந்தும்...
தொடர்கின்றேன்...
முடிந்தவரை...
மனிதனாகவே...!!!

Friday, June 14, 2013

அவளுக்கு என்ன ஆச்சு...!!!



காலையிலே
மலர்கின்றாள்
மாலையிலே சுடுகின்றாள்...!!!

பாதையிலே
நடக்கின்றாள்
பதட்டத்தில் கதைக்கின்றாள் ...!!!

நித்தம்
என்னைக் கானாது
வெறி பிடித்து
பித்தாகின்றாள்...!!!

கண்டு விட்டால்
காயப்படுத்தி
விடுகின்றாள்
இதயத்தை தானே...!!!

ஏதோ போக்கில்
போனவனை
தனக்குள்
அடக்கிகொண்டவள்...!!!

தயங்கிய
போதெல்லாம்
அணைத்துக் கதை
பேசியவள்...!!!

இன்று அவளில்
ஒரு தடுமாற்றம்
இல்லை தனிமாற்றம்...!!!

என்னை
சோதித்துப்
பார்க்கின்றாளா இல்லை
துரத்தப் பார்க்கின்றாளா...!!!

மனதில்
ஒரு நெருடல்
என்னையறியாது
ஒரு ஏக்கம்...!!!

கற்பனை உலகில்
என்கதை
முடிந்துவிடுமோ
ஏன் இந்தக்
கலக்கம்
நினைத்துப் பார்க்க
முடியவில்லை
அவளின்றி என்பயணம்...!!!

உறவுகள்...!!!



சந்தர்ப்ப
சாக்கடைகள்
உள்ளொன்று வைத்து
உறவாடும்
வேடம் தாங்கிகள்...!!!

கண்கலங்கி
மனதோடு நாமும்
ஓட்டிகொன்டாலும்
விஷத்தை கக்கி
சுவை பார்க்கத் துடிக்கும்
சொந்தக் காரர்கள்...!!!

எத்தனை வன்மங்கள்
முன்னுக்கு [புன்]புண் சிரிப்பு
பின்னுக்கு
காறித் துப்பும்
எண்ணங்கள்
எங்கிருந்து தான்
ஊற்றெடுத்துக் -
கொள்கின்றனவோ...!!!

உறவுகளை
உதறிவிட்டு ஊமையாக
வாழத்தான் மனமும்
ஏங்குகின்றனவே
இன்று முதல்
புதியமனிதனாகவே
பிறப்பெடுத்துக்-
கொண்டேன்
உண்மையாகவே...!!!

இருவர் உள்ளம்...!!!





இன்பக் காற்றுக்களை
சுமந்து சுமந்து
தென்றலுக்குள்
அகப்பட்டுக்கொண்ட
இதயங்களின்
பாஷைகள் தான்
என்னவோ...!!!

புத்தாடை கட்டி
புதிப் பொழிவோடு
தென்றலும்
இதயங்களுக்குள்
புகுந்துகொண்டனவா
இல்லை
தட்டுத் தடுமாறி
காயங்களை
பதித்து விட்டனவா...!!!

ஒரு மனதோடு
மறு மனது
முட்டி மோதி
மகிழ்கின்றனவே
எப்படித்தான்
காந்த சக்தியொன்று
இவர்களுக்குள் பிறந்து
சங்கமம்
ஆகிக்கொண்டதோ...!!!

இருவர் உள்ளங்களும்
தடுமாறிக் கொள்கின்றனவே
ஏதோ ஒரு
சுகமான சுமைகளை
சுமந்துகொண்டே
நந்தவனத்தில்
பாதங்களை
பதிப்பதால் தானோ ....!!!

ஒற்றுமை...!!!



வேற்றுமை இன்றி
தமிழாய் வாழ்வோம்
நிரந்தர உலகில்
ஒற்றுமை காண்போம்
காலத்தின் கட்டளை
சினங்கள் கொண்டோம்
இன்றோ
சிந்தித்து சிந்தித்தே
நிம்மதி இழந்தோம்...!!!

வேற்றுமை கூடி
தமிழனை

வாட்டி வதைத்தது
எல்லாம்
உணர்ந்த்ததால்
கூட்டம்
நம்மை மிதித்தது
நாடுகள்
கைகள் நீட்டியே
வெறுத்தது
நாகரீகம் கையை
சுட்டு தின்றது ...!!!

எங்கே போவது
தெரியாதே
கால்கள் பிரண்டது
மனித நேயம்
யார்
கண்ணிலும் படாது
ஓடியே மறைந்தது
இன்று வாழ்கின்றோம்
கைகளில் கிடைத்ததை
தொலைத்தே விட்டு...!!!

நிலவவள்...!!!





ஏதோ ஒரு
புதிய பரவசம்
என்னை தொட்டு
நலம் விசாரித்தது
உடம்பெல்லாம்
புத்துயிர் பெற்று
புன்னகைத்தது...!!!

மனதை
உருவி விட்டு
ஒரு இன்பக்காற்று
வந்து
முத்தமிட்டது...!!!

எனக்கே புரியாத
ஒரு ஏக்கம்
ஏன் இந்தத் தாக்கம்
வானத்தில் இருந்து
புதிய ஓசையா
இல்லை
புதிய பரி பாஷையா...!!!

கண்கள்
பேச மறுக்கின்றது
காதில் வந்து
சொல்லிப்
போனதோடு சரியா
நிச்சயம் என்னில்
ஒரு மாறுதல்
தெரிகின்றது
எதனைக் கண்டேன்
நான் இன்று...!!!

இழவு காத்த
கிளிபோல
துடித்த மனசு
புது உவகை
கொண்டதேன்...!!!

மனதோ வலிக்கின்றது
ஆனாலும்
இன்பத்தின்
வழியாகவே
தெரிகின்றதே...!!!

கண்களும்
குளமாகின்றது
கருத்தோ
மாறுபடுகின்றதே
நிலவவள் நெஞ்சை
தொட்டதால் தானோ
எல்லாமே
மாறி விட்டதோ...!!!

யாரை நம்பி...!!!



தாயை நம்பி
பூமியில் குதித்தேன்
தந்தை
காட்டிய வழியில்
நானும்
சென்றேன்
உடன் பிறந்தோர்
நம்பிக்கையில்
நானும் நடந்தேன்
இன்றோ
ஏதோ விரக்தியில்
எல்லாமே
தப்பாகத்தான் போனதே
தரம் கெட்ட
உலகத்திலும்
நம்பிக்கை தான்
தொலைந்ததே...!!!

ஆண்டவன்
அனுப்பி வைத்த
அழகான மனையாள்
அறிவான
பிள்ளைச்
செல்வங்கள்
இரண்டும் இருந்தும்
ஏதோ ஒரு தனிமை
எனக்குள் வந்து
கோலம்
போடுகின்றனவே
வறுமைகள்
பக்கத்தில்
வரத்தான்
பயந்தோடி விட்டன
இருந்து மனதில் ஒரு
வெறுமை தெரிகின்றதே...!!!

நம்பிக்கை
வைத்தவர்கள்
தடம்
புரள்வதால் தானோ
நானும் வெறுமை
கொண்டேனோ
இல்லை
நானாகவே
தெளிவிழந்து
உலகில்
வாழ்கின்றேனோ
என்றும்
சொந்தக் காலில்
நின்றே பழக்கப்பட்டவன்
யாரை நம்பி வாழ்வேன்
குடும்பம் என்ற
சொந்தக் காலில்
தொடர்ந்து
நடை பயில்கின்றேன்
நம்பிக்கையோடு...!!!

முடிவுகள்....!!!



யாரோ
எழுதிவிட்டான்
யாருக்கோ
பாடு பட்டான்
கல்லாகிப்போனது
எங்கள் கனவுப்பாதை...!!!

நிதர்சனங்கள்
நிர்மூலமாகி
நிர்க்கதியாகி நின்றோம்
நீந்திக்கரை
சேரவும்
துடுப்பும் இல்லை
ஒரு
துரும்பும் இல்லை...!!!

வந்தவன்
கதையெல்லாம்
வெட்டியாகிப்போச்சு
மிஞ்சியவன் வாழ்வோ
வேதனையாகிப் போச்சு...!!!

காற்றும் விஷமாகி
சில இதயங்களை
நிறைத்துப்
போனது தான் மிச்சம்
விஷம் கலந்தவர்களின்
கோரத்தாண்டவம்
கொளுத்துப்போனதே...!!!

இனியும் என்ன சோதனை
பொய் பேச்சுக்களில்
மேடைகளும்
முட்டிப்போகின்றதே
முகவுரை
தொலைத்த இனம்
மூச்சு விடக்கூட
இடமின்றி அலையுதே...!!!

இது முடிவா?
முடிவின் ஆரம்பமா?
இல்லை
திராணியற்ற வார்த்தைகளா...!!!

அணையாத நெருப்பு...!!!



அகலக்கால் பதித்து
அகப்பட்டுக்
கொண்ட உத்தமர்கள்
அண்ணார்ந்து பார்த்து
உலகை அளந்த
அற்புதர்கள்...!!!

நேற்று முடிந்ததை
இன்று
கணக்குப்பார்க்கும்
மேதைகள்...!!!

இயலாதவர்கள் மேல்
சவாரி செய்வதில்
சளைக்காத மானிடர்
எதற்கும் அஞ்சாது
கெஞ்சி நிற்கும்
கொஞ்சல்காரர்கள்...!!!

கோயிலும் சாமியும்
இவர்கள் வசம்
தோற்றுப்போகும்
சோம்பேறிகள்...!!!

முதுமை கொண்ட
மனிதர்கள்
முயல் பிடிக்கின்றனர்
மூன்று கால்களுடன்...!!!

முக்காடு போட்ட
தமிழர் மனம்
அலைபாயுதே
அடுத்தவன்
கை பிடிக்க...!!!

ஆண்டாண்டு காலம்
அடம்பிடித்து
அடிச்சுப்பிடித்தது
அவன் இவன்
கைகோர்க்கவா...!!!

தலைக்கு மேல் தண்ணீர்,
சான் போனாலென்ன
முழம் போனால் என்ன
தப்பித்தவர்களின்
மனங்களில்
அணையாது
அணையை முடியாதது...!!!

ஏன் பிறந்தேன்...!!!


கண்ணுக்குள்
கண்ணை வைத்து
ஏதோ ஒரு பாடம்
கவியின்
நெற்றியில் வந்து
என்ன தான் மோகம்...!!!

சித்திரம் வரைந்து
நினைவில்
ஒரு ஏக்கம்
நீங்காத கதைகள்
வந்து பேசிடும் தாக்கம்...!!!

வாயில்லா
பூச்சிகளின்
வார்த்தைகளின்
ஜாலம்
முடிவில்லா
வேதனைகள்
தந்து விடும் வேதம்...!!!

நானென்ன நீயென்ன
யாருக்குத் தான் தாகம்
யாரால் வந்த பாவம்...!!!

காலங்கள்
போதித்ததில்
நாம் எதனை
சாதித்தோம்
நயவஞ்சகர் உலகில்
நாயகர் யார் தானோ...!!!
.
நாளும் எதையோ
சாதிக்க துடிக்கின்றேன்
நாட்களும்
வெறுக்கின்றதே
பாவம் செய்து
பிறந்தேனா இல்லை
பாதை இல்லா பிறந்தேனா?...!!!

தொழிலாளர் தினம்...!!!


சூடான வியர்வை
தினம் தோறும்
வழிந்தோடி
மனது கனத்து
உடலும் நலிந்து
சாதிக்கத் துடித்து
வாழத்தான் முடியாது
முதலாளிகளின்
முகவுரைக்கு மட்டும்
தீனி போடத் துடிக்கும்
மானிடர் தினம்
ஒரு நாள்
நினைத்துப்பார்க்க
துடிக்கும் நாள் தானே..!!!

எத்தனை கூக்குரல்களில்
குரல்வளை
நெரித்து வார்த்தைகளில்
சுதந்திரங்கள்
பறிக்கப்பட்டு
அடிமை என்ற முத்திரை
குத்தப்பட்டு
போலிமுகங்களை
கிழித்தெறிய
அடையாள படுத்தப்பட்ட
தினம் என்று
ஏமாற்றம் கொள்கின்றோமா
இந்த மே தினத்தில் மட்டும்
சாந்தம் கொள்கின்றோமா...!!!

வாழ்க்கை என்னும்
வட்டத்தில் எத்தனை
போராட்டங்கள்
தொழிலாளர்களை
மட்டும் சூழ்ந்துகொன்டதே
விடியல் மட்டும்
தொலைந்துபோய்
வெளிச்சம் வருகின்ற
திசைகளில்
தேடுகின்றோம்
காலம் காலமாக
தேடுகின்றோம்
ஏமாற்றப் பட்டவர்களாகவே
தொழிலாளர்கள்
முத்திரை ஏமாற்றம் தானே...!!!

இருமனம்...!!!



நாளும் எதையோ
தேடுகின்றது
தினமும் மனதும்
வாடுகின்றது
ஒன்றை விட
மற்றொன்று
சுவையாகவே
உறவாடுகின்றதே...!!!

உள்ளம் மட்டும்
ஏக்கத்தில் கழிகின்றது
உண்மைகள்
புரியாமலேயே
மயக்கத்தில்
தடுமாறி
தவழ்கின்றதே...!!!

இக்கரைக்கு ஏனோ
அக்கரை
இனிக்கின்றததே
மனம் மட்டும்
பல வர்ணங்களாக
மாறிக்கொண்டதால்
தானோ...!!!

எத்தனை ஏக்கங்கள்
புகுந்து கொண்டதோ
இருமனம் எத்தனை
கொடுமைகளில்
புகுர்த்தி விடுகின்றதோ
யார் மனதை
யார் அறிவாரோ
நான் அறியேன்...!!!

காதல் பிரிவென்றால்...!!!





கண்ணும் கண்ணும்
பேசிய பாஷையில்
கண்ணீரை தெளித்துவிட்டு
எங்கோ ஒரு பயணம்
எதனைத் தாலாட்டப்
புறப்பட்டதோ
புண்ணியம் புனிதம்
என்று முணுமுணுத்த
வார்த்தைகள்
எங்கே தான்
தொலைந்து போனதோ ...!!!

துணைக்கு பிறையையும்
அழகுக்கு நிலவையும்
அழைத்து வந்தவர்கள்
இதயங்கள்
கானல் தோட்டத்து
கரும்பாகிப் போனதோ
கசப்புக்கு
விலையாகிப் போனதோ...!!!

மணித்துளிகளில்
மகுடங்களும்
மரத்துப் போனதா
நம் வாயில் வந்த
வார்த்தைகளும்
வெறுத்துப் போனதா
பிரிவு வந்து
சுகங்களை அள்ளித் தந்ததா
சுக்குநூறாக்கி விட்டு
மீண்டும் பயணிக்கின்றோம்
இதயங்களை நொருக்கத்தானே ...!!!

லண்டன் ஹீத்ரோ [விமான நிலையம்]





மருமகன் திருமணம்
இலங்கையில் கொண்டாட்டம்
அவன் பட்டம் பெற்று
பெருமை கொண்டதோ
இலண்டன் மாநகரம்...!!!

வழியனுப்ப சென்றேன்
என் மனம்
குளிர்ச்சி கொள்ளவே...
விமான நிலையம்
அங்கே வழியனுப்ப
வந்தவர்களின் ஏக்கங்கள்
சில துளிகள்
என்னையும்
வாட்டிச் சென்றதே...!!!

தாயகம்
நோக்கி வழியனுப்ப
வந்தவர்கள் இதயம்
வேறுவிதமாக துடித்தது
அவர்கள் துடிப்பும்
என் இதயத்தில் விழுந்து
கீறிவிட்டுப் சென்றது...!!!

தாயக கனவுகள்
எங்கள் கால் அங்கே
முத்தமிட முடியாத
கொடூர ஆதிக்கங்கள்
மனம் இருந்தும்
வழிதெரியாத
ஏக்கங்கள்
எனக்குள்ளும்
வந்து குத்திக்கொன்டதே...!!!

என் கண்களிலோ
ஏக்கம்
சொந்த மண்ணில்
கால் பதிக்க
முடியாத தாக்கம்...!!!

மருமகன் கைகாட்டி
மறைந்துகொண்டு
இருந்தான்
சோதனைகள் முடித்து
என் இதயமும் கண்ணீரில்
நனைந்துகொண்டு இருந்தது
என் சோதனைகள் முடிந்து
எப்பொழுது நானும்????????...!!!

Wednesday, June 12, 2013

முகமூடி...!!!



வெண்ணிற மேனியில்
உன் அழகை
மறைத்துவைத்து
யாருக்காக காத்து
இருக்கின்றாய்
என் கண்களை மட்டும்
தினம் எதற்கு
நீயும் சீண்டிப்
பார்க்கின்றாய் ...!!!

கனவுலகம் ஒன்று
தோன்றி தினமும்
உன் நினைவிலேயே
என்னை வந்து
தாலாட்டி விட்டு
மறைந்து விடுகின்றதே
மாயமா இல்லை
உன் நினைவில் வந்த
மோகம் தானோ...!!!

புதிய
எண்ணங்கள் வந்து
எனக்குள் புகுந்து
புழுவாகத் துடிப்பதால் தான்
புரியாத பாஷைகளும்
தினமும் என்
வாயில் வந்து
முணு முணுக்கின்றதோ...!!!

உன்னைக் கண்டதில்
வந்த ஏக்கமா இல்லை
எனக்குள் நீ வந்ததில்
இந்த மாற்றமா...
பாடாய்ப் படுத்தும்
உன் முகமூடிக்குள்
எதனை நினைத்து
என் நித்திரையை
தொலைக்கின்றாயோ
தொலைகின்றேன் நானும்...!!!

தவிக்கின்றேன்...!!!





பகலில் ஒரு
நிலவு தோன்றி
என்னைப் பார்த்து
ஏதோ பாடுகின்றதே
அந்தப் பாடலின்
வரிகள் மட்டும்
வலிகளாக வந்து
வழிகாட்டி செல்கின்றதே...!!!

அவள் முகம்
காணத்தான்
என் கண்களும்
அலை மோதுகின்றனவே
திரும்பாத அவள்
மேனி பட்ட தென்றலின்
நறுமணங்கள் வந்து
என்னை
தழுவிச் செல்வதால்
என் இமைகளும்
மயக்கம் கொண்டதே...!!!

அவள் கலகலத்த
சிரிப்புக்கள் கூட
சிதறி எதையோ
சொல்லத் துடிக்கின்றதே
சோக மேகமொன்று
பற்றிக்கொண்டு
அவளை
பாடாய்ப் படுத்துகின்றதோ...!!!

காற்றின் கீதத்தில்
தளர்ந்து செல்கின்றாளே
அவளை
தாங்கிப் பிடிக்கத்தான்
என் மனமும்
ஏங்கித் தவிக்கின்றதே
தருவாளா
அவள் இதையத்தை
எனக்குள் புதைப்பாளா
தவிக்கின்றேன்
நானும் இங்கே...!!!

கேள்வி இங்கே பதில்...???



உன்னை நான்
பார்த்த பொழுது
எனக்குள்
ஒரு போராட்டம்
என் நினைவுகளும்
உனக்குள் சங்கமித்து
உன்னிடம்
என் நினைவுகளும்
உறவாடுமா இல்லை
யார் இவன் என்ற
கேள்வி மட்டும்
உனக்குள் வந்து போகுமா...!!!

பார்த்து பார்த்து
நான் மட்டும்
எனக்குள்
பிதற்றிக் கொள்கின்றேன்
நீ போகும்
பாதை கண்டு
என் மனதையும்
சிதறடிக்கின்றேன்
என்னவளே
நீ மட்டும்
நின்று பார்க்காது
போகின்றாயே
நினைவில்லையா?
இல்லை மனமில்லையா...!!!

பைத்தியமாகவே
உன் நினைவுகளை
மட்டும் சுமந்து
தினம் சாகின்றேன்
நீ நடந்த பாதைகளில்
என் பாடையும்
நலமாக போகவேண்டும்
என்னவளே
அன்றாவது
உனக்கும் தெரியட்டும்
நான் யார் என்று?
ஏன் இவன் இன்று...???

மயங்கும் பொழுதே...!!!





மான் விழி கண்டேன்
மயங்கி விழுந்தேன்
உன்
பதுமையில் நானும்
பயமும் கொண்டேன்
காற்றுக்கள் பேசிய
வார்த்தைகள் கேட்டு
நானும் வியந்தேன்
உன் பெயரை மூச்சாக
சுவாசித்த பொழுது
மீண்டும் மீண்டும்
பிறந்தேன் உனக்காகவே...!!!

புதிதாக தினம்
புதுமை கொள்கின்றாயே
உன்னைப் படைத்தவன்
யார் மீது மோகம் கொண்டு
உன்னை புதுமையாக்கி
இவ்வுலகில்
தவழவிட்டானோ
என் கண் முன்னே
ஏன் தானோ
புரியாத புதிராகினேன்
உன்னால் நான் தானே...!!!

கவிஞர்கள் வந்து உன்
முகம் பார்த்துத் தானே
பேனா தேடுகின்றனர்
மைகள் தீர்ந்து
போவதால் தானோ
உன் கண்களின் கருவிழிகளை
தானம் கேட்கின்றனரோ
அவர்கள் தாகம்
தீர்த்திடவே உன்
கருமையை கடன்
கேட்கின்றனவோ...!!!

முட்டாள்கள் தினம்...!!!





தமிழன் தோன்றிய
காலத்திலேயே
பிறந்துவிட்ட
பழைய தினம்
காலங்காலமாக
தமிழனோடு
ஒட்டி உறவாடி
வாழ்ந்து காட்டியே
புதிய
அவதாரம் எடுத்து
சாதனை படைக்கும்
எங்கள் தினம்...!!!

தினம் தினம்
ஏமாந்து போவதில்
தமிழனைப் போல்
பெருமை கொள்பவன்
இவ்வுலகில் வேறு
எவரும் உண்டோ
இல்லை அவனை மிஞ்சி
ஏமாந்தவனை நீயும்
கண்டதும் உண்டோ...!!!

வாய்க்கரிசி போடவே
உன் தோளில் கைபோட்டு
அலைகினறனர் பலர்
நீயே கொண்டுபோய்
வாயையும் தோளையும்
கொடுத்து தலையை
சொறிகின்றாய்
காலங் காலமாகவே
உனக்குத்தான் தினம்
முட்டாள்கள் தினம்
வந்து போகின்றனவே
இன்று மட்டும் என்ன
புதிதாக யோசிக்கின்றாய்
முட்டாள் ஆனது போல்...!!!
[கவிஞர் இராஜேந்திரா]

Wednesday, March 27, 2013

காதலும் நட்பும்....!!!





கண்ணால்...
பேசிவிட்டு...
கனவில்...
தூங்கினேன்...
காதல் என்றார்கள்...!!!

மனதால் அவள்...
வாழவேண்டும்...
தினம் ஏங்கினேன்...
புனித நட்பு...
என்றார்கள்...!!!

நினைவுகள் மட்டுமே...
மாற்றிக்கொண்டேன் ...
உறவுகள் தானாகவே...
மாறிக்கொன்டதே...!!!

காதல் விளையாட்டில்...
எல்லாமே மறந்து...
சிறகு முளைத்து ...
நட்பாகியவுடன்...
எல்லாமே...
தேடி வந்து...
கை கொடுத்ததே...!!!

தடுமாறிய...
உள்ளங்கள்...
அமைதியாகின...
தடம்மாறிய...
வார்த்தைகளோ...
தடுமாறின...
நட்பு எல்லோர்...
மனதையும்...
நிம்மதி வழியில்...
இட்டுச் சென்றதே!!!

காதல்...
கண்ணீர் குடைக்குள்...
முடங்கிக் கொண்டதே ...
கண்ணீர்களும்...
வெள்ளமாக...
ஏன் தான்...
பெருக்கெடுத்ததோ...!!!

வசந்தம்...
எங்கே வீசுகின்றது...
தேடி அலைந்தேன்...
நட்பு வந்து...
அழைத்து சென்றதே...
நம்பிக்கையோடு...
செல்கின்றேன்...
நட்பாகவே...!!!

மெழுகுவர்த்தி...!!!





அமைதியாகி...
யாருக்கும்...
அடி பணியாது...
நிமிர்ந்து நின்று...
ஒளியாகி...
கை கொடுத்து...
மற்றோர்...
வழிகாட்டியாக...
வாழ்ந்திடும்...
புதுமை தானே....!!!

கண்ணீர்களை...
அடக்கிக்கொண்டு...
பன்னீர்களாக...
வாசனை வீசும்...
உள்ளங்கள்...
உண்மையில்...
யாருக்காகவோ...!!!

நித்தம் ஏதோ...
சில...
புயல் காற்றுக்களும்...
அடை மழைகளும்...
தாக்கிடுமே ...
இவர்கள் எண்ணம்...
புரியாமலே...
வேதனைகளை...
கொட்டிவிட்டு...
போய்விடுமே...!!!

தனிமை...
இவர்களுக்கு...
பிடித்துப்...
போய் விட்ட பாதையா...
நேரம் கூடி வரும்...
என்று கனவு காணும்...
தேவையா...!!!

தங்களை...
உருக்கிக் கொண்டு...
என்ன தான் சுகம்...
காண்கின்றார்களோ...
இன்பத்தில் மட்டும் ...
எப்படித்தான்...
வாழ்கின்றார்களோ...!!!

போதனை வாழ்வில்...
பழகிப்போனவர்கள்...
வசந்தங்கள்...
இவர்கள் பக்கம்...
திரும்பாது...
போவதில் தான்...
என்ன மாயமோ...!!!

புயல் காற்றுக்கள்...
இவர்கள் பக்கம்
வீசாது திரும்பி போய்...
இவர்களை...
வாழ விடுமா...!!!

கடல் அலைகள்...!!!



கரையத் தொட்டு...
என்ன தான்...
சொல்லிப் போகின்றாய்...
நீ செய்தி...
சொல்கின்றாயா...
இல்லை...
கண்ணீர் ஓவியம்...
வரைந்து செல்கின்றாயா...!!!

துள்ளி வரும்...
வெள்ளலையே...
தூது கொண்டு வரும் ...
உன் விழிகள்...
தூங்காது....
நனைகின்றதே...
எதற்காகத் தான்...
இந்த ஆர்ப்பரிப்போ...!!!

கல்லிதயங்களை...
கரைத்து விடப் ...
பார்க்கின்றாயா...
கரையாதது என்று...
தெரிந்தவுடன்...
திரும்பி...
போகப் பார்க்கின்றாயா...!!!

வெள்ளந்தி வேஷங்கள்...
கலைந்துவிடப்...
போகிதன்றோ...
உள்ளொன்று ஏதோ...
துடிக்கிதே ஏன் இன்று...!!!

நித்திய சோதனைகள்...
நிம்மதியற்றுப்...
போகின்றனவே ...
நினைத்ததெல்லாம் ...
நிர்மூலமாகி...
வதைக்கின்றனவே...!!!

கற்பனைகள் கூட...
கைதியாகி விட்டனவே...
கலங்கரை...
விளக்குகள் கூட ...
அணைந்து...
திசைகள்...
மாற்றி விட்டனவே...!!!

மோகத்தில் வந்த...
அலைகள்...
முகம் சுழித்து..
சென்று விட்டனவே ...
நிலை தெரியாது...
அவள் மனமும்...
நிம்மதியற்றுப்...
போகின்றதே...
கனவுகள்...
கலைந்தது போல்...!!!

ஆசிரமம்...!!!



ஆதங்கங்கள்...
அமைதியாகி...
அழுகைகள்...
வெளியே தெரியாது...
அடங்கிடும்...
கூடம் தானே...!!!

எத்தனை...
கற்பனைகள்...
எத்தனை...
சந்தோசங்கள்...
எத்தனை...
பாசத் துடிப்புகள்...
அத்தனையும்...
அடங்கிடும்...
உறைவிடம் தானே...!!!

கண்களில்...
எத்தனை கனவுகள்...
சுமந்தோர்...
காயப்பட்டு...
இதயம் மட்டும்...
நொந்து...
இல்லாத
வாழ்விற்காக ஏங்கி...
வருத்திக்கொள்ளும்...
உறவுகள் தான் எத்தனை...!!!

பாவ மூட்டைகள்...
உலகமே...
சுமக்கின்றதே...
பாச மூட்டைகள்...
சுமக்க முடியாது...
அடங்கிகொள்ளும்...
ஆத்மாக்கள் தான்....
எத்தனையோ...!!!

கால ஓட்டத்தில்...
கனவுகள்...
ஆசிரமங்களில்...
புதைந்து...
விடுகின்றனவா...
இல்லை...
புதைக்கப் படுகின்றனவா...
இதயம்...
கொதிக்கின்றதே ...
உண்மை புரியாமலேயே...!!!

அமைதி தேடி...!!!



எதனை...
சாதித்தாய்...
உன் வாழ்வில்...
எதனை இழந்தாய்...
உன்னை மறந்து...!!!

உனக்குள் உன்னை...
நொந்து கொள்கின்றாய்....
உதிரம் வழியா...
திரை மறைவில்...
தினம் தினம்...
வெந்து கொள்கின்றாய்...!!!

வாழ வைத்தவர்கள்...
மனதை கிழித்து...
உன் மன...
சாந்தி வேண்டி...
தேடித் போவதில் தான்...
என்ன நாட்டமோ...!!!

பூ வைத்து...
பொட்டு வைத்து...
வாழ வேண்டியவளே...
பூஜை அறையில்...
மண்டியிட்டு...
எதனைத் தேடுகின்றாய்...!!!

காலத்தை...
நீ தொலைத்தையா...
கன்னித் தன்மையை...
இழந்தாயா
கண்ணீரை மட்டும்...
சொந்தமாக்கி...
செத்து மடிகின்றாயே...
யாருக்காகவோ...!!!

வாழவேண்டியவளே...
வாழ்வு...
ஒரு முறை தான்...
வாழ்ந்து பார்...!!!

வாழ்வில் ஒளி....
வீசவேண்டியவள் நீ...
நீயே அழிந்து போகலாமா...
உனக்காக....
பல பேர் கண்ணீர்கள்...
வழிந்து ஓடலாமா...!!!

நிஜங்கள்...!!!



கண்களால்...
பார்த்துவிட்டு...
கதைகள் பேசி...
பழகிவிட்டோம்...!!!

உண்மைகள்...
உறங்கிக்...
கொள்கின்றன...
உணர்வில்லாது...
பொய்மையில் மட்டும்...
பூரித்துப்...
போகின்றோமே...!!!

ஏதோ ஒரு சக்தி...
நம்மை முடக்கி...
ஆளத்...
துடிக்கின்றதே...
அருவெறுத்துப் ....
போகின்றதே...
இயலாமையின்...
இறுக்கத்தினால் தானோ...!!!

கல்லிதயங்கள்...
கருக்கட்ட தொடங்கி...
முற்களில்...
பாய் விரித்து...
முகம் புதைத்து...
எதையோ...
கணக்குப்...
போடுகின்றனவே...!!!

காலம் போடும்...
கணக்கை புரியாது...
நாங்கள் போடும்...
தப்புக்கணக்கால்...
உவகை...
கொள்கின்றோமே...
புரியாது வாழ்வில் ...
புரியாத மனிதர்கள்...!!!

புனிதத்தை இழந்து...
புதுமைகள் தேடி...
புழுவாகின்றோம்...
நிஜங்கள்...
இறந்துக்கொண்டே...
இதயத்தை....
வதைக்கின்றனவே...!!!

Monday, March 25, 2013

திரை மறைவில்....!!!





கல் மனங்கள்...
கண்ணீரில் கரைகின்றது...
காதல் கொண்ட...
உள்ளங்களோ...
உண்மையில்...
உதிர்கின்றது ...!!!

பாதை...
வகுத்துக் கொடுத்தவன்...
வார்த்தைகள்...
வழி தெரியா..
விழி உடைந்து...
இருண்டு போகின்றதே...!!!

பாசங்கள்..
போட்டி...
போட்டுக்கொண்டே..
வேஷங்கள் போட...
பழகிக் கொண்டதே...
புற முதுகில்...
எதனைத்தான்...
எழுதுவேனோ...!!!

கண்டதெல்லாம்...
கண்கட்டி வித்தையாகத்...
தெரிகின்றதே...
ஏமாற்றங்கள்...
எனக்குள் விதையாகி...
விருட்சம் கொண்டதே...!!!

திரை மறைவில்...
இருந்துகொண்டே...
பல கண்கள்...
என்னை...
குறிவைக்கின்றதே...!!!

பகல் கனவில்...
வாழ்ந்து...
பழகி விட்டேன்...
புதுக் கனவுகள்...
புதை குழிகளாக...
கண்களை...
பறிக்கின்றதே...!!!

தினம் வாழ்கின்றேன்...
தீண்டாது...
என்பக்கம்...
சிறை...
வைக்கத் துடிக்கும்...
அன்பு உள்ளங்களால்...
தினம் வாழ்கின்றேன்...!!!

தோல்வி...!!!






சக்தியையும் புத்தியையும்...
தீட்டிவிடும்...
கூர் தீட்டிய...
ஆயுதம் தானே!!!

சோர்ந்துவிடாது...
உன்னை...
உணர வைத்து
நுணுக்கங்களை...
கற்றுத் தரும்...
போர்வாள் தானே...!!!

காலம் உனக்கு...
சொந்தமானது...
பாதை மாறது...
பயணம் செய் மனிதா ...!!!

கண்டதை....
மனதில் கொண்டு ...
திண்டாடுவதில்....
எதனைக் கண்டாயோ...!!!

வெற்றி போதை...
உனக்கு...
கிடைத்திவிட்டால்...
வந்த பாதை...
நினைத்துப் பார்ப்பாயோ...!!!

தோல்வி கண்டு...
துவண்டு விட்டால்...
சொந்த காலில் தான்...
வாழ நினைப்பாயோ...!!!

தினமும் ஒரு...
போதி மரம்....
தோல்வியாக வந்து...
உனக்கு உரம் ஏற்றி...
செல்கின்றதே...!!!

வெற்றிக் கனிகள்...
கையில் ஏந்தி...
இறுமாப்பு கண்கள்
உன்னை மறைக்காது ...
தோல்வியின் வலிகள்...
உன்னை தினம் தினம்...
காத்திடுமே...!!!

பொறுமை...!!!





பெருமைகள்...
உன்னை தேடிவரும்...
திறமைகள்...
உன்னைச் சுற்றியே...
வேலி போடுமே...!!!

உன்னை யாரும்...
அளவெடுத்து...
விட முடியா ...
மௌனமே...
உன்னைக் காத்திடுமே...!!!

மரியாதை...
உனக்கு கிடைக்கும்...
பொக்கிஷம் தானே...
பொறுமையால் வந்த...
வைர கிரீடம் தானே...!!!

வார்த்தைகளால்...
வாதம் செய்வதில்...
என்ன பெருமையோ...
வேதனைகள் சுமப்பதில்...
என்ன தான் தர்மமோ...!!!

காலங்கள்...
எவ்வளவோ...
மாற்றங்கள் கண்டு...
மறைந்து விட்டன...
மனிதனின்...
பதட்டங்கள் மட்டும்....
மறையவில்லையே...!!!

ஏற்றத் தாழ்வுகள்...
தினம் தினம்...
பிறந்துகொண்டே...
ஆட்கொள்கின்றதே...
அதை முறியடிக்க...
முடியா தடுமாற்றங்கள்...
மனதில் உறவு கொள்ளுதே...!!!

பொறுமை....
உன் உடலுக்கும்...
உன் உள்ளத்துக்கும்...
ஊக்கம் கொடுத்து...
உண்மை...
மனிதனாக மாற்றிடுமே...!!!

மன அழுத்தம்...!!!




மனதை நீ ...
இழந்து மற்றவரை...
துடிக்க வைப்பதில்...
சுகம் கண்டீரோ...!!!

செய்யும்...
பிழைகளில் இருந்து...
தப்பித்துக்கொள்ள...
போடும்....
வேஷங்களில்...
ஒரு வேஷம்..
இந்த வேஷமோ ...!!!

திட்டம் போடாது....
தினம் வாடி...
திடம் கொள்வதில்...
உன்...
சீற்றம் தான் என்னவோ...!!!

உன்னை....
கட்டுப் படுத்தாத...
சாடலை...
மற்றவரை...
மட்டுப் படுத்த...
நினைப்பது...
முறைதானோ...!!!

அமைதியையும் ...
பொறுமையையும் ...
உன்னை விட்டு...
தொலைத்துவிட்டு...
அடங்காது...
அடுத்தவர் மடியில்...
கை வைப்பது...
சரி தானோ...!!!

மனமோ மகுடி...
ஊதுகின்றதே...
அதன் பக்கம்...
வளைந்து ஆடுவதை...
நிறுத்திவிடு...
நிம்மதி...
உன் காலடியில்...
நிரந்தரமாக....
மண்டியிடுமே...!!!

அன்புக்கு அடிமை...!!!



ஆளத் துடிக்கும்...
மனசுகள்...
அங்கலாய்க்க...
அலட்டிக்கொள்ளாது...
அமைதியாக..
அன்பை சுமக்கும்...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

காலை வாரி விட்டு...
சுகம் காணும்...
மானிடர் முன்னே...
தரும் வேதனைகளை...
மறந்து கை கோர்க்கும்...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

எங்கும் வஞ்சம்...
எதிலும் ஒரு ஏக்கம்...
இருந்தும் உண்மை....
மனிதனாக வாழும் ....
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

கண் மூடி...
கண் திறந்தால்...
காண்பதெல்லாம்...
வேடிக்கை தானே...
காலத்தின் நிலையறிந்து...
வாழும் மனித...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

அன்பையும் பண்பையும்...
தேடித் திரிகின்றான்...
இவனிடம்...
இல்லாததால் தானோ...
இவன்...
கண்களில் இருந்து...
ஒழிந்து மறைகின்றதோ...!!!

வாழ்வென்ற...
வட்டத்துக்குள் மட்டும்...
புதைந்து கொண்டோம்...
அதனால் தானோ...
மனித மனங்களை...
அறுத்து சுவைக்க...
பழகிக் கொண்டோமோ...!!!

எதற்கும் அடிமை...
இல்லா மானிடன்...
எங்கே காட்டுங்கள்...
அங்கே நான்...
அன்புக்கு...
அடிமையாகி விடுகின்றேன்...!!!

வஞ்சிக்கப் பட்டவள்...!!!



காக்க வைத்து...
கழுத்தில்...
சுருக்கிட வைத்தது...
ஏன் தானோ...!!!

மஞ்சள் தாலி...
எதிர்பார்த்தவள்...
மணவறை நோக்கி...
மனதால்...
நடை போட்டவள்...!!!

இன்றோ விதி...
விளையாடியதால் ...
நிர்க்கதியானாளே....
நிம்மதியற்று....!!!

யார் போட்ட கோலமோ...
யாருக்காக...
இவள் வாழ்வில்...
சாபமோ...!!!

தினம் தினம்...
வேதனை...
சுமக்கின்றதே...
இவள் இதயம்...
கனவில் மிதந்தவள்...
கண்ணீரில்....
நீந்துவது எதற்காகவோ ...!!!

பாக்கியசாலியாக...
பிறந்தவள்...
பைத்திய காரியாகி ...
நடை பிணம்...
இவள் வாழ்வில்...
ஏன் தானோ...!!!

காதல் கொண்ட...
இதயம்...
இன்று கனத்த...
இதயமாகி...
வஞ்சிக்கப் படுகின்றதே...!!!

வாய் மூடி...
மௌனிக்கின்றாளே...
வார்த்தை இல்லை...
வடிப்பதற்கு....
அவள் வாழ்வு
என் சிந்தனைத்...
துளியாகட்டும்...
என் கவிதைகளுக்காக...!!!

நான் அழகில்லாதவளா...!!!


ஆண்டவன்...
அருளினால் பிறந்தேன்...
என்றும் பெற்றோரின்...
ஆனந்த உவகையில்...
நனைந்தேன் நான்...!!!

கருப்பு தேவதை...
நான் தான் என்று....
தினம் பெற்றோர்களும்...
மற்றோர்களும்...
எனக்கு சூட்டி மகிழ்ந்த...
பட்டங்கள் தானே...!!!

என் தாயின் உதட்டில்...
நனைந்தவள் ...
இன்றோ கண்ணீரில்...
நனைகின்றேன்...
என்னை அறியாது...
தினமும் கரைகின்றேன்...!!!

கட்டிக்க போறவன்...
கனவில் மிதந்தேன்...
அவன் நினைவில்...
தினம் என்னை மறந்தேன்...!!!

திருமண மேடை...
என் பக்கத்தில்...
நெருங்கிய வேளை..
மணவாளன் வார்த்தை கேட்டு...
நொறுங்கிப் போனேனே ...!!!

என் கனவில்...
என்னைத் தாலாட்டியவன்...
என் அழகை வர்ணித்து...
தூக்கி எறிந்தானே...
நொறுங்கிய இதயம்...
மீண்டும்...
உயிர் பெறவில்லையே...
ஊசலாடுகின்றேன் ....
உணர்வற்றவளாக...!!!

கடவுள்...
அமைத்து தந்த மேடை...
தரை மட்டமாகியது...
மறு மேடை தேடிப்போக...
மனமும் தடுக்கின்றதே...
மீண்டும் ஒருவன் ...
உதடுகளோ என் அழகை...
முனு முனுக்காது ஒழியட்டும்...!!!

மனதை வருடுகின்றது...!!!





வாழும் மனிதரை...
கண்டுவிட்டாலே...
உள்ளம் ஏதோ...
உவகை கொள்கின்றதே ...!!!

உண்மையை...
புரிந்தவர்....
உள்ளங்கள் தானே...
வாழ்ந்து வழிகாட்டி...
வாழ்வை விளக்கி...
சென்றனரே...!!!

யார் தொடர்கின்றனர்...
யாருக்காக மட்டும்...
வாழ்கின்றனர்...
காலங்கள் வாழ்வை ...
விதைக்கின்றனவே...
வினையா தினையா...
அறுப்பது தான்...
நம் கையில் புரியாத...
புதிராக இருப்பது...
புரியவில்லையே...!!!

தேடுகின்றோம்...
தேவையற்று...
வாடுகின்றோம்...
தேடி தேடி காலங்களை...
தொலைக்கின்றோம்...
கடைசியில் கையளவு ...
சாம்பலாக மிஞ்சி...
காற்றினில் கலந்தும்...
விடுகின்றோமே...!!!

இதற்காகத் தான்...
இத்தனை ஆட்டங்களா...
இலை உதிர்ந்தும்
மாறாத மாற்றங்களா...
பாடாய் படுத்தும்...
வாழ்வுக்காக...
இத்தனை ஓட்டங்களா...!!!

காலத்தை...
கனிவோடு பார்க்கத்தானே...
தவறி விட்டோம்...
காத்து இருந்த கண்கள்...
பூத்துக்கொண்டதால்...
மாறிவிட்டோமா...
இல்லை போட்டி போட்டு...
நடிப்பதில் மட்டும்...
கவனத்தை சிதற விட்டோமா...!!!

இருந்தும் மனதை...
வருடுகின்றதே ...
காலத்தை வென்று...
மனிதன்...
வாழப் பழகிவிட்டான்...
நினைக்கும் பொழுது...
உள்ளம் அமைதியாகின்றதே...!!!

மாயம்...!!!





மனித மனங்கள்...
தினம் தினம்...
கரைந்து போகின்றதே...
கண்ணீர்களும்...
வற்றிப் போகின்றதே...!!!

பாசங்களில்...
கீறல்கள் விழுந்து...
வேசங்களாக பிறப்பெடுத்து...
பூமியை ஆட்கொண்டு...
மனித மனங்கள்...
அங்கலாய்க்கின்றனவே!!!

ஆறுதல் சொல்வதாக...
மாறுதல்...
காணத் துடித்து ...
எதனை ஏற்றுக்கொண்டோம்...
எதனை இழந்ததினால்...!!!

கோயில்களில் கும்பாபிசேகம்...
மடங்களில் அன்னதானம்...
எங்கள்...
இதயங்கள் மட்டும்
ஏன் தான் ...
தீட்டுப் பட்டது போல்...
தடுமாருகின்றதோ...
தரம் இழந்து எதனை...
காணத் தான் துடிக்கின்றதோ...!!!

பாதைகள்...
வகுத்துக்கொண்டு...
பள்ளங்களில்...
தடுமாறுகின்றோம்...
பாவிகளாக...
தடம் மாறத் தான்...
இத்தனை போட்டிகளா ..
எத்தனை அவசரங்களா...!!!

மாயம்...
மோகம் கொண்டதே...
மௌனத்தில் மட்டும்...
உன்னை...
ஆட்கொள்ளப்...
பிறந்ததே...!!!

மாயம்...
உன்னை விட்டு...
தொலைந்து விட்டால்...
மீண்டும்...
மனிதனாகி விடுவாய்...
மனித மனங்களில்...!!!

சந்தர்ப்ப வாதிகள்...!!!





உலகில்...
வாழப் பிறந்த...
உண்மையானவர்கள்..
உலகம் புரிந்து...
தங்களை மட்டும்...
காத்துக்கொள்வதில்...
வல்லமையானவர்கள்...!!!

வேதாந்தம் பேசி...
தானும் மூடனாகி...
மற்றவர்களையும்...
மட்டம் தட்டத் துடிக்கும்...
மானிடர் முன்னே....
இவர்கள்....
புனிதமானவர்கள் தானே ...!!!

எத்தனை....
மனித மனங்கள்...
சுத்தம் செய்ய முடியா...
மாசற்றுப் போய்...
தடுமாறுகின்றனவே ...!!!

சுத்தம் செய்யப் போனவன்...
முதுகுகள் தான்...
கிழிக்கபட்டு...
சிதைந்த....
கதைகள் தானே எத்தனையோ...!!!

இவர்களால்...
யாருக்குத் தான்...
என்ன பாதகமோ...
யார் அழிந்த...
கதைகள் தான் ஏராளமோ...
அதனால்...
இவர்களுக்குத் தான்...
என்ன படு பாவமோ...!!!

காற்றுள்ள பொழுதே....
தூற்றிக் கொள்கின்றார்கள்....
காற்றடிக்கின்றது...
இவர்கள் பக்கம்...
காத்திருக்க வேண்டிய...
அவசியம் தான் என்னவோ....!!!

கடைசியில் பாடைகள்...
எல்லோருக்கும் தானே...
உயரிய சிந்தனை...
கொண்டவனுக்கு...
தனியான சமாதியா....
கிடைத்து....
விடப் போகின்றது...!!!

வாழும் வரை...
வாழ்ந்து விட்டு...
போகின்றார்கள் ...
அதிலே சாமானியர்கள்...
உண்மையில்...
இவர்கள் தானே....!!!!

சிறை பிடித்த கைகள்...!!!



அன்புக்கு...
கட்டுப் பட்டுத்தான்...
அடங்கிக் கொண்டேனா...
இல்லை அதிகார...
முத்திரை இட்டதால்...
மயங்கி விட்டேனா...

மொத்தத்தில்...
என் மனமோ...
மோதி பார்க்கின்றனவே...
முடியாததினால்...
மௌனமாகின்றதே ...!!!

நித்தம் ஒரு கணக்கு...
தேடி வந்து...
விடை தெரியா...
திரும்பி செல்கின்றதே...!!!

விடை தெரிந்த நானும்...
விளக்கம்...
இல்லாதவன் போல்....
வீம்புக்கு...
சாதிக்கின்றேனா ...
எனக்குள்...
முட்டி மோதியே ...!!!

தலைவிரி கோலங்கள்...
தள்ளாடுகின்றன...
தங்கள் மொழிகளிலேயே ...
பரிதவிக்கின்றன...
பார்த்திருந்த...
என் கண்களுக்கு...
கண்ணீர்கள் தான்...
விருந்தாகின...!!!

சிந்தனை சிறைகளில்...
தள்ளப் பட்டேன்...
கை விரல்களில்...
விலங்கிட்டு...
எதையோ வடிக்கின்றேன்...
என் இதயத்தில்...
விழுந்த கீறல்களை...
மறைத்துக்கொண்டே...!!!

மயங்கியது இல்லை...
மயக்கமும் என்னை...
அணைத்ததும் இல்லையே...
இன்று மட்டும் ஏன்...
சிறையானேன்...
சிந்தனைகளை...
சிதற விட்டதால் தானோ...
சிறையானேன்...!!!

அழகிய தேன்கூடு...!!!






கண்கள் வியந்திடும்...
கனிவுகள் பிறந்திடும்...
பார்த்துக்கொண்டே...
மனமும் மயங்கிடும்...!!!

யாரும் நெருங்கா...
இதயங்கள் வென்றிடும்..
இன்பங்கள்...
தடைகள் போட்டு...
துன்பங்களை...
விரட்டிடும்...!!!

காத்துக் கறுப்புகள்...
நெருங்கத் தான் துடிக்கும்...
இவர்கள்...
வாசல் மட்டும் வந்ததும்,...
மனம் மாறித்தான் ...
இவர்கள் பக்கம்...
சாயத் துடிக்குமே...!!!

இணை பிரியாத...
சந்தோசங்கள்...
இவர்களுக்காக மட்டும்...
பிறந்ததேன்...
கடவுள்...
இவர்கள் பக்கம்....
மட்டும் சாய்வதேன்...!!!

கூண்டுக்கிளிகள்...
இல்லை இவர்கள்...
சுதந்திர ராகம் பாடும்...
சுமைகள் அற்ற....
சுதந்திர கிளிகள்...!!!

தேன்கூடு கலையாது...
களையும் கூடும் இல்லை...
சந்தோஷ கதவுகள்...
மட்டுமே அதிகம்...
அதில் எங்கே அராஜகம்...
பிறக்கும், பிழைக்கும்
எறியும் கற்களும்...
ஏதோ ஒரு...
திசைக்கு போகட்டும்...
இயலாமைகள்...
ஆமை வேகத்தில்....
நகரட்டும்....!!!

தேன்கூடு சுவையானது...
பிரிக்க முடியாதது...
பிரித்துப் பார்க்க...
நினைப்பவர்கள் உள்ளம்...
ஊமையாகட்டும்...!!!

வாழ்க்கை புத்தகம்..!!!







படித்து முடியாத...
படிக்க தோன்றாத...
பல காவியங்கள்...
மறைந்து,மறந்து ...
கிடக்கின்றதே...!!!

யாருக்கு...
என்ன மோகமோ....
எதனை இழந்து...
எதனை அடையத்...
துடிக்கின்றோம்...!!!

எல்லாமே...
ஏதோ ஒரு வேகத்தில்...
முட்டி மோதுகின்றனவே...
முடிவு தான் தெரியாது...
வாழத் துடிக்கின்றனவே...!!!

எல்லாமே...
ஒரு நம்பிக்கை...
காலங்கள் நமக்குள்...
கட்டுப்பட்டு விட்டதாக...
இது...
கனவுகளின் நிஜங்களா...
இல்லை...
நிஜங்களின் நினைவுகளா...!!!

பூட்டை...
தொலைத்துவிட்டு....
சாவியை மட்டும்...
நம்பி வாழ்கின்றோம்...
புதுமைகள்...
ஆழ்கின்றன...
பாசத்தோடு பழமைகள்...
விடை பெற்றுவிட்டன ...!!!

மூக்கணாம்...
கயிறு போல்...
இழுத்த...
இழுப்புக்கெல்லாம்...
தலைகளை ஆட்டியே...
பழகிக்கொண்டோம்...!!!

வாழ்க்கை...
ஒரு சுவையான கூடாரம்...
வாழத் தெரியாது...
கூரைகளை பிய்த்தெறிந்து...
கை விரல்களாலேயே...
வானத்தை...
மறைக்க பார்க்கின்றோமே...

படிக்க முடியாத...
புத்தகத்தை...
கிழிக்காமலாவது ...
விட்டு வைப்போமா...
இல்லை...
மனிதனால் முடியாத...
ஒன்றை சிந்திக்கின்றேனா...!!!
[கவிஞர் இராஜேந்திரா]

தமிழன் முதுகு...!!!



பழக்கப் பட்டு ...
விருப்பப் பட்டு...
என்றென்றும்...
தொடரும்...
இடம் தானே...!!!

கட்டியணைத்து...
முத்தமிட்டு...
கதைகள் பல பேசி...
பின்பு கை...
வைக்கத் துடிக்கும்...
இடமும் அது தானே...!!!

தன்னினத்தை...
அழித்து
பிற இனத்தின்...
வாழ்வுக்கு...
வழி காட்டிடும்...
உன்னதத் தமிழர்கள்...
உலகில்...
எத்தனை எத்தனையோ...!!!

தமிழன் வளர்ச்சி...
தமிழனுக்கே...
பய கிளர்ச்சி...
தூங்காது...
வாட்டி வதக்கிடும்...
பழக்கப்பட்ட..
அவன் குணமும்...
வேறு யாருக்குத் தானோ...!!!

கல்தோன்றா ...
மண் தோன்றா ...
காலத்து இனத்துக்கு...
ஒரு கல் பூமி கூட...
சொந்தமில்லையே...
முதுகுகள் மட்டும்...
சொந்தமானதால் தானோ...!!!

முகவுரைகளை...
மாற்றித் தானே...
பழகிவிட்டோம்...
தமிழன் வார்த்தைகளை...
தரம் கெட்டதாக...
எண்ணிக்கொண்டே...
தவறான விதைகளை..
விதைத்து...
வினைகளை மட்டும் தானே
அறுவடை...
செய்துகொண்டோம்...!!!

காலங்கள்...
பல கதைகள்...
கூவுகின்றன ...
தமிழன் வாழ்வு...
விடியும் நம்பிக்கை...
பிறக்கும் பொழுது...
கூறிய வால்கள்...
குரல்வலையை...
தமிழில் பேசியே ...
அறுத்துச் செல்கின்றதே....
விடியுமா தமிழன் வாழ்வு...!!!

சந்தோசம்...!!!





தாய்ப் பால்...
குடித்த பொழுது...
கவலை மறந்தோம்..
மழலையாக...
மண்ணில் தவழ்ந்தோம்...

பாடசாலை...
தொடக்கத்தில்...
பாடம் சுமந்தோம்...
நண்பர்கள் பக்கம்...
நட்பாய் நிமிர்ந்தோம்...!!!

காலங்கள்....
உருண்டதில்..
கவலையும் கண்ணீரும்...
சுமந்தோம்...
காரணம் இன்றி...
தினமும் வெந்தோம்...!!!

பாதைகள் தெரிந்ததும் ...
பயணங்கள்...
தொடர்ந்தோம்...
சந்தோசக் காற்றை...
தேடி அலைந்தோம்...!!!

இன்றும்....
தேடிக்கொண்டு தான்...
இருக்கின்றோம்...
எங்களுக்குள்...
ஒழிந்து இருக்கும்....
சந்தோசங்களை...
தேடாது வெளியில்...
தேடுகின்றோம்...
பித்து பிடித்த மனிதர்களாக...!!!

சந்தோசங்களை...
காசு கொடுத்து...
வாங்கத் துடிக்கின்றோம்...
எங்களை சுற்றி..
இருந்த இன்பங்களை...
தொலைத்துவிட்டு...

புரிந்த உலகத்தில்...
புரியாது நடிக்கின்றோம்
புதுமைகளுக்கு...
மயங்கியே...
எல்லாவற்றையும்...
தொலைக்கின்றோம்...!!!

காலம் காலமாக...
சபிக்கின்றோம்...
பேராசைகளை...
விழுங்கிக்கொண்டே...
எதுவும்...
கிடைக்காதது போல்...
போட்டி போட்டு...
நடிக்கின்றோம்...
நாம் எல்லோருமே...!!!

ஊமை விழிகள்...!!!



வாய்கள்...
பூட்டப்பட்டு...
மூளைகள்...
முடக்கப்பட்டு...
நாடி நரம்புகள்...
நசுக்கப்பட்டு...
எதையோ...
தேடுகின்றனர்....!!!

வார்த்தைகள்...
மட்டும் வருகின்றது...
வாழ்வை நோக்கி...
நகர்கின்றது...
இருந்தும்...
என்ன பயன்...
யாருக்கு தான்...
என்ன பயம்...!!!

கோபுரங்களை ...
அண்ணார்ந்து...
பார்த்து மட்டும்...
பழகிவிட்டோம் ...
அதன் விழுதுகளை...
ஏன் தானோ...
மறந்துவிட்டோம்...!!!

புரியாத புதிராக...
முடங்கிக்...
கிடக்கின்றோம்...
ஏனோ தானோ...
வாழ்வை....
சுமக்கின்றோம்...!!!

வசந்தங்கள் தான்...
வெறுத்துப்...
போகின்றதே...
மனிதர்களிடம்...
இருந்து தான் ...
விலகத் துடிக்கின்றதே...!!!

உறவுகள் பற்றிய...
உண்மைகளை ...
சொல்லவேண்டுமா...
இல்லை சொல்லாது...
விழுங்கிட வேண்டுமா...!!!

கண்கள் கட்டித்தானே...
கடிவாளம் பூட்டப் பட்டது...
மீண்டும் ஏன்...
உலகத்தைப் பார்க்கின்றாய்...
ஊமை விழிகளால்...!!!

Sunday, March 24, 2013

தாலி மட்டும் மின்னுகின்றது...!!!






கை நீட்டி அணைக்க...
வேண்டிய கைகள்...
காமப் பூக்களாக ...
தேடி அலைகின்றதே...!!!

ஒரு நிமிடம்...
சிந்தை இழந்து...
மந்தைகளாக மானிடர்...
தடம் புரண்டு...
ஐயகோ என்ன...
வாழ்க்கையோ...
வாடுகின்றேன் ...
வழிகள் பற்றி எரிவதால்...
வதங்கியே சாகின்றேன்...!!!

கதைகளில் கூட...
நாவை சுட்டுக்கொள்ளாது...
வரும் வார்த்தைகள்...
என் மேனியை...
சுட்டெரிக்கின்றதே...!!!

படு பாவம்...
செய்து விட்டேனா...
பாவியிடம்...
சிக்கி விட்டேனா...
தினம் ஒரு சவால்...
முறியடிக்க...
முடியாது முறிகின்றேன்...!!!

கண்ணீர் துளிகளில்...
பன்னீர் தெளிக்கப்...-
பார்க்கின்றேன்...
வெந்நீராகி...
என்னையே....
பதம் பார்க்கின்றதே...!!!

முயலுக்கு...
மூன்று கால்கள்....
முரண்டு பிடிக்கும்...
மானிடனிடம்...
வாதம் செய்கின்றேன்...
எதனை பதிலாக...
தந்து இருப்பான்...
நினைத்தே ஜாகம்...
செய்கின்றேன்...!!!

என் விழிகளில்...
ஏதோ ஒரு வெளிச்சம்...
என்னை முன்னோக்கி...
அழைத்துச் செல்கின்றது...
அறியாத என்னினைவும்...
அலங்கோலங்களை...
அறியாது செல்கின்றதே...!!!

கரங்கள் கை நீட்டுகின்றது...
என் கண்ணீர் துளிகளில்...
தாலி மட்டும்...
நனைந்து மின்னுகின்றதே...!!!

என் உள்ளம் மட்டும் வாடி...
உருக்குலைந்து போவதில்...
என்ன நியாயமோ...
பெண்னாக பிறந்ததால்...
வந்த மாயமோ...!!!

கனா கண்டேனடி தோழி...!!!






கதிரவன்
கலங்கி நின்று
ஏதோ சொல்லவந்த
செய்தி கேட்டு...!!!

என்னவள்
வருகைக்காக
ஏக்கத்துடன்
நான் வாட...!!!

புன்முறுவல் ...
பூத்த வண்ணம்...
நங்கையவள்...
நாணம் கொள்ள...!!!

அவளோசை ...
போன திசை..
பொங்கித் தானே...
நானும் போக...!!!

வா என்று அழைக்கா...
வாடித்தான்...
அவள்...
போவதெங்கே...!!!

காலடி ஓசை...
அவள் காலடி ஓசை....
காரணம் சொல்லா...
கண்களின்....
சோகத்தை மட்டும்....
தெளிப்பதேன்....!!!

பாரத்தை....
சுமந்து வந்து...
பாதியில் விட்டுத்தான்...
போவதேன்....!!!

நிம்மதி....
பெருமூச்சுக்கள்...
நிதானமற்று...
நிர்க்கதியாகப்....
போவது தான் எங்கேயோ...!!!

பாவம் அவள்...
பருதவிக்கின்றாள்...
பாவி என்னை...
நட்பாக...
ஏற்றுக்கொண்டதால்...
தினம் துடிக்கின்றாள்...!!!

நான்....
தொலைத்த நட்பை....
தேடி அலைகின்றேன்...
நாகரீகமாக அவளிடம்...
சொல்லத் துடிக்கின்றேன்..
சாகும் வரை தொடரும்...
அவள் மேல்...
நான் வைத்த...
புனித நட்பு...!!!

இது கனவு....
இல்லையடி தோழி...
என் உள்ளத்தில்...
வந்த உண்மையின்
குமுறல்கள் தானடி தோழி...!!!