எத்தனை புரிதல்
அவள்
முகங்ககளில் தான்
எத்தனை கவிகள் ...!!!
ஒவ்வொரு
வடுக்களும்
அவளுக்குள் மட்டும்
எப்படித்தான்
சுகமான சுமையாக
உரு மாறிக்
கொள்கின்றனவோ...!!!
ஊமையாகி
அவள்
உணர்ச்சிகள் மட்டும்
உறங்கிக்
கொள்கின்றனவே
உதிராத அவள்
வார்தைகள்
என்ன தான்
பேசிக்-
கொள்ளுமோ ...!!!
பதுமையான
அகராதி அவள்
வேதனைகளை
விழுங்கிக்கொண்டு
மாற்றுமொழியில்
மயங்க வைக்கின்ற
வித்தையை
எங்கேதான்
கற்றுக்கொண்டாளோ...!!!
அவள்
புன்னகை என்னும்
புது மொழியாள்
என் மனதில்
பூத்துவிட்ட
வாசனை மாறா
பூச்சரமும்
அவள் தானே ...!!!