Thursday, April 19, 2012

அழியாத கோலங்கள்.....!!!


நினைவுளில்...
அவள் ஒரு...
வசந்த...
காலம் ...!!!

காலங்களில் ...
அவளோ...
என்னுடன்...
வாழும்...
காலம் ...!!!

சோகங்கள்...
கண்டு...
துடித்துப் போவாள்...
கண்ணீர் கண்டு...
நொறுங்கிப் போவாள்...!!!

பார்வையில்...
பல அர்த்தம்...
சொல்பவளின்...
மௌனத்தில்...
பல மொழிகள்...
சொந்தமானதே...!!!

அவளோ...
தீண்டாத...
ஒரு விளக்கு...
தீண்டப் போனால்...
சுடும் நெருப்பு...!!!

என்...
இதயச் சுவடுகளில்...
அவள் தடங்கள்...
நிரந்தரம்...
ஆகிவிட்டதே...!!!

நினைவுகளை...
அவளுக்காக...
சொந்தமாக்கிக்...
கொண்டேன் ...!!!

உணர்வுகளை...
ஊமையாக்கி...
உள்ளுக்குள்...
பேசிக் கொண்டேன்...!!!!

உயிரோடு...
ஒட்டிவிட்ட...
பிரியாத...
என் உயிரே...!!!

உனக்காக...
வாழ்கின்றேன்...
உறவோடு நானே...!!!

பூப்படைதல்...!!!


கூனிக்குறுகி...
கூட்டத்தின் முன்...
அவள் இருக்க....!!!


தாய் தந்தையரோ...
வந்த கூட்டத்தை...
எண்ணிப்பார்க்க...!!

வெற்றிலை...
பாக்குகள்...
சுற்றி நின்று...
வேடிக்கை பார்க்க....!!!

பருவ மாற்றத்தில்...
பெண்ணவளும்...
நெளிந்து நிற்க....!!!

என்னடா சோதனை...
தமிழச்சியாய்...
பிறந்தால்...
வந்த வேதனையா...!!!

என்ன நடந்தது...
ஏன்...
இந்த திருவிழா...
பெற்ற...
மகளை வைத்து...
பொருட்காட்சியா....!!!

பரிசுப்பொருட்களும்....
குவிகின்றது...
அவள்...
மனமோ...
வெந்து சாகின்றது...!!!

யாருக்கு தெரியும்...
அவள்...
மன உளைச்சல்கள்...!!!

பெண்ணாக...
பிறந்ததால் தான்...
அவளுக்கு...
வந்த விதியா...!!!

பெற்றவளும்...
பெண் தானே...
அவளின் கூச்சம்...
தாயவளுக்கும் ...
புரியவில்லையா?...!!!

கேடு கேட்ட...
மனித இனமே...
சிந்தித்து பார்...
பருவ மாற்றமும்...
கொண்டாட்டமா?...!!!

ஊமையின் ராகம்


உனக்குள்ளே...
ஒரு ராகம்....
ஊருக்கில்லை
தாளம்...!!!

உன்....
கண்கள் மட்டும்...
பேசுதே....
உன் வலிகள்....
மட்டும்....
அருவியாய்...
சிதறுதே....!!!

உன்னைச் சுற்றியே....
பூ....
மேகங்கள்...
உனக்குள் மட்டும்....
ஏன் தானோ...
தனிமை ...
சோகங்கள்...!!!

கதிரவன் கூட...
உன்னைக்...
கண்டுதானே...
குளிர்வடைவான்...
கார்மகமே....
சுட்டெரிக்கின்றாயே...
உன்னை நீயே...
பற்றவைக்கின்றாயே...!!!

பதறிப் போகின்றேன் ...
சூடான உன்....
கண்களின்....
வெப்பத்தில்...
கருகிப்போகின்றேன் ...
என்னவளே....!!!

உனக்குள்....
ஒரு வாட்டமா...
ஏன் தான் ...
இந்த...
தடுமாற்றமோ...!!!

உன்னில் ...
நான்...
வாழ்கின்றேன்...!!!
நீ...
வாடியதால்...
இன்று...
நானும் வாடுகின்றேன்...
உன்னோடு சேர்ந்தே...!!!

Tuesday, April 17, 2012

கேள்வியின் நாயகி


என்...
பதில்களின்...
நினைவுகள்...
பகுத்தறிவின்...
சின்னங்கள்...!!!

எத்தனை...
வருடல்கள்...
நிம்மதியின்...
தழுவல்கள்...!!!

காயங்கள்...
நான்...
கொண்டால்...
மருந்துகளும்...
நீ தானே...
என்...
மனதின் காயம்...
சொன்னேன்...!!!

வாழ்க்கை...
தத்துவங்கள்...
உன்னிடம்...
பாடம் கற்குமே...!!!

இன்றோ...
உன் குருதி...
துடிக்கின்றதே...
உனக்கே...
தெரியாது...
வசைபாடும்...
மனிதரைக்கண்டு...!!!

காலத்தின்...
கட்டளை...
உனக்கு மட்டும்...
ஏன்...
சோதனை மேல்...
சோதனை...!!!

உனக்குள்...
அழுகின்றாயே....
வேதனை...
வெளியில் சொல்லி...
பழக்கமற்றவள்...
என்பதால் தானோ...!!!

ஊமையின்...
ராகம்....
யாரறிவார்...
உனது கானம்...
நானறிவேன்...
என்...
நாயகியே...!!!

உன்...
ரணங்களை...
நான்...
சுமக்கின்றேன்...
கலங்காதே...
என்னவளே...!!!

ரோஜா மலர்


உதிராத...
புதிய மலரே...
உன்...
புன்னகை..
மட்டும்...
உதிரக் கண்டேன்...!!!

யாருக்கும்...
பணியாத...
உன்...
உள்ளம்...
அன்புக்கு ...
அடிமையாகும்...
அழகில்...
வீழ்ந்தேன் நானும்...!!!

நீயோ...
ஒரு...
தனிப்பிறவி
உன்னால்...
வாழ்பவர் முன்...
நீதான்...
புதுப் பிறவி ...!!!

உன்...
கண்கள் மட்டும்...
தேடும்...
கலங்கும்..
கண்களுக்கு ...
கனிவுரை...
சொல்லத்தானே...
தினம் துடிக்கும்...!!!

காதல்.....
வார்த்தை...
உன் பக்கம்....
வந்ததில்லை...
உன்....
வார்த்தைகளில்...
நடிப்பு ...
இல்லாததால் தானோ....!!!

இன்றோ...
உன் மனதில்....
ஒரு சஞ்சலம்...
உனக்கே....
தெரியா ஆதங்கம்....
உன்னைக் கொள்கின்றதே...
நடிகனின் கைகளில்....
சிக்கிகொண்டாயா....
உன்னை அறியாமலேயே...!!!

நதிக்கரையில்....


நீண்ட...
காலம்...
காத்து இருந்தேன்...
இளவம்....
காத்த கிளி போல...!!!

கண் முன்னே..
துள்ளித் திரிந்தது...
நான் ரசித்த...
மீன் குஞ்சு...!!!

காத்திருந்தேன்...
காலமெல்லாம்...
எனதாக்கி கொள்வேன்...
எனக்குள்...
ஒரு இறுமாப்பு...!!!

வாய்...
மொழிகள்...
மட்டும்...
பரிசாகப் பெற்றேன்...!!!

காலத்தின்...
மொழிகளை...
கனவாக ...
கண்டுகொண்டேன்...!!!

பாவமறியா....
மீன் குஞ்சும்...
துடியாய்...
துடிக்கின்றதே...!!!

கண்ணீர் கூட...
யாருக்குத் தான்...
தெரியப்...
போகின்றதோ...!!!

கொக்குகளும்...
வட்டமடிக்கின்றது...
என்...
கண் முன்னே!!!

காத்திருந்த...
என் விழிகள்...
கானலாகப்...
போய்விடுமோ...
காய்கின்றேன்...
நான் இங்கே...!!!

Friday, April 13, 2012

மோக முள்...


எள்ளி நகையாடியது....
என்னைப்....
பார்த்த....
தென்றல்கள்...!!!

எதுவுமே...
பேச விருப்பமின்றி....
விலகிச்....
சென்றனர்...
என்னவர்கள்...
கண் முன்னே...!!!

காதல்கள்...
கை...
கொட்டிச் சிரித்தது....
இதயங்கள்....
சிதறித்...
துடித்தது...!!!

எல்லாமே...
வேடிக்கையாக...
தெரிந்தது....
புரியாத புதிராக...
மறைந்தது...!!!

வாழ்க்கை...
என்னிடம்....
தோற்றுப் போனது...
வாழத்...
தெரியாத...
என்னைப் பார்த்தே...
பயம் கொண்டது...!!!

எல்லாமே...
என்னை விட்டு...
போய் விட்டது....
நம்பிக்கை...
கை பிடித்து...
நடக்கின்றேன்...

மோகம்...
எனக்கு ...
முள்ளாகவே....
தெரிகின்றது...
முன் நோக்கி...
செல்கின்றேன்...
திரும்பி....
பார்க்காமலேயே...!!!

வயதில்லா காதல்....


கருவறையில்...
தொடங்கி...
காற்றோடு ...
கலக்கும் வரை...
யாரைத்தான்...
விட்டது...!!!

திகட்டாத...
சின்னமல்லோ..
காதல்...
சின்னங்கள்...!!!

சிந்தனை....
தூண்டிடும்...
நித்தமும்...
புதிதாய்...
பிறந்திடும்...!!!

கற்றவர்...
கண்கள் கூட...
மங்கிடும்...
காதல்...
வார்த்தையில்...
நெகிழ்ந்திடும்...!!!

ஏற்ற...
தாழ்வுகள்...
தொலைந்திடும்...
ஏக்கம்...
மட்டும்..
பிறந்திடும்...!!!

மாற்றங்கள்...
நிகழ்ந்திடும்....
மனதைத் தானே...
தினமும்...
தின்றிடும்..!!!

காதல்...
வந்து விட்டால்...
வயதுகளும்...
தொலைந்து விடும்...
வாலிபங்கள் தானே......
தவழ்ந்து வரும்...!!!

முதல் பார்வை


கண்ணோடு....
கண்....
மோதிக்கொண்டது....
அவள்.....
கடந்து....
சென்ற பொழுது...!!!

இதயம் மட்டும்....
துடித்துக்...
கொண்டது...
அவள்...
பார்வைக்காக
ஏங்கிக் கொண்டது ...!!!

என்ன...
கண்டேன்...
அவளிடம் மட்டும்...

எதற்காக...
இந்த ஏக்கம் ...
எனக்குள் மட்டும்....
வந்த...
தாக்கம்...!!!

காதல்....
வலியா...
இல்லை...
அவள்...
இதயத்துக்கு...
போகும்...
வழியா...!!!

அவள் முதல்...
பார்வையிலேயே...
இழந்து விட்டேன்...
என்னை....
தொலைத்து விட்டேன்....!!!

தேடுகின்றேன்...
என்னை...
நானே தேடுகின்றேன்...!!!

அவளுக்குள்...
நான்...
தொலைந்ததை...
மறந்து....
தேடுகின்றேன்....!!!

Monday, April 9, 2012

நான் யார்?...!!!


உனக்கு...
தெரியவில்லையா...
உண்மை தான்...
புரியவில்லையா...!!!

என்னையே....
மறந்து...
விடுகின்றேன்...
உள்ளத்தில்...
கீறலோடு தானே...!!!

பாடைகள்...
நானே செய்து...
வைக்கின்றேன்...!!!

பாதையும்...
நானே....
தேடிச் செல்கின்றேன்...!!!

கனவுகளில்...
வாழ்வும்....
மூழ்கின்றதே....!!!

காணலாக...
போய் விடுமோ...
யார் அறிவார்...
நானறியேன்...!!!

என்னையே...
நொந்து...
கொள்கின்றேன்...!!!

இயலாமை...
அறிந்து...
வெந்து ...
கொள்கின்றேன்...!!!

நான் யார்...
பல தடவை...
கேட்டும் விட்டேன்...!!!

பதில்...
தெரியாமல்...
மீண்டும் மீண்டும்....
கேட்டுக்கொள்கின்றேன்....!!!

புன்னகை..


என் ...
இதயமே
ரணம் இழந்தது...
நீ தந்த...
சின்னத்தினால்...!!!

பொன்னகை ...
அணியா...
புன்னகையே...
பூக்களின்...
மேனியை...
கொண்டவளே...!!!

கண்களில்...
ஈரம் சுரக்கும்...
மற்றவர்...
வேதனை...
கண்டு மட்டுமே...
உன் கண்கள்...
தெறிக்கும்...!!!

உன்னைப் பற்றி...
நீ தான்....
நினைத்ததுண்டோ...
உனக்காகத்...
தான் நீ...
என்றும்...
வாழ்ந்ததுண்டோ...!!!

யாருக்காவோ....
அழுகின்றாய்...
யாருக்காவோ....
வாழ்கின்றாய்...
உனக்காக...
வாழ்கின்ற ...
என்னை மறந்து...!!!

உறவென்று...
உன்னை...
நினைக்கின்றேன்...
உன்...
உள்ளத்தில்...
நான் இன்றி...
யார் தான்...
வாழ்வாரோ...!!!

Sunday, April 8, 2012

இரு தலைக்கொல்லி எறும்பு...!!!


ஏன்...
இந்த தண்டனை...
எதற்காக தானோ...
இந்த வேதனை...!!!

யாருக்காக...
மோதுகின்றேன்...
யாரை...
நினைத்து...
வாடுகின்றேன்...!!!

என்னவளின்...
வலிகளில்...
துடிப்பதா....
இல்லை...
நடிப்பதா...!!!

என்ன...
பாவம் செய்தேனோ...
நானும்...
ஏன் தான்....
பிறந்தேனோ...!!!

சோகங்களை...
பருகி...
சுகத்தை...
நாடுகின்றேன்...!!!

சுகத்தை...
தொலைத்து...
கல்லறை....
தேடுகின்றேன்...!!!

யாரை....
நினைத்து...
தினம்...
வாடுகின்றேன்...!!!

அவள்...
வருகைக்காக...
தானே நானும்...
உயிர்...
வாழ்கின்றேன்...!!!

உன்னை தவிக்க விடுகின்றேன் .....!!!


மனதில்...
உன்னை....
நினைக்கின்றேன்....!!!

மௌனமாக...
உன்னை...
அணைக்கின்றேன்...!!!

கவியில்.
உன்னை...
குழப்புகின்றேன்...!!!

விதியில்...
நானே...
அகப்பட்டுக்...
கொண்டேன்...!!!

கனிவாய்...
உன் முகம்...
கண்டதுமே...
மறந்து...
விடுகின்றேன்...!!!

என்னை...
நானே...
இழந்து...
விடுகின்றேன்...!!!

கண் மூடி...
உன்னை..
விழுங்கிக்...
கொள்கின்றேன்...
சுவாசிப்பதட்காகவே..!!!

உன்னை...
தவிக்க விடுகின்றேன்...
என்னை...
தினம்...
நினைப்பாய்...
என்பதால் தானோ....!!!

உன்னை எதிர்பார்த்து...!!!


ஏக்கத்தில்...
கண்கள் ...
கலைந்திட..
வழிமேல்...
விழி வைத்தேன்...!!!

நீ...
வரும் திசை...
நோக்கி நின்றேன்...
என்னை மறந்தே...!!!

கற்பனைகள்...
சிறகடித்தது....
கவிகள் கூட...
மழுங்கிக் கொண்டது...!!!

என்னவள்...
வருகையில்...
நடுக்கம் கண்டாதா...
இல்லை...
உறக்கம் கொண்டதா...!!!

எத்தனை...
வாட்டங்கள்...
எனக்குள் தான் ...
போராட்டங்கள்....!!!

உன்னை...
எதிர் பார்த்தே...
உணர்வைத்...
தொலைக்கின்றேன்...
ஊமையாகின்றேன்...!!!

சோகங்கள் ...
கூடப் பிறந்ததினால்...
உறவானதோ...
என்னவளே...!!!

உன்னுடன்...
உறவாடும் பொழுது....
மறந்து...
விடுகின்றேன்...!!!

கலக்கத்தை...
தொலைத்து...
விடுகின்றேன்...!!!

உறவே...
வருவாயா...
என்னை...
அணைப்பாயா?...!!!

இறந்தாலும் சுகம் தான்...!!!


இன்றுவரை...

நினைத்ததில்லை...
ஏக்கத்தில்...
வீழ்ந்ததில்லை...!!!

கண்ட பொழுது ...
கலங்கினேன்...
கனவில்...
தினம்....
நினைவிழந்தேன்...!!!

அவள்...
செயலாள் ...
தினம்...
மறந்தேன்...
என்னை...
தினம்...
மறந்தேன்...!!!

கண்களால்...
பேசினாள்...
கவிதை...
வரைந்தேன்...!!!

கனவில்...
பேசினாள்...
என்னை...
மறந்தேன்...!!!

இன்றோ...
அவள்....
பேசினாள்...
எனக்குள்...
அவள் தான்....
பூத்துவிட்டாள்...
அதனை...
உணர்ந்தேன்...!!!

அந்த...
மலர்...
என்னை...
அணைத்த பொழுது...
இன்று...
இறந்தாலும்...
சுகம் தான்....
நானும்...
உணர்ந்தேன்...!!!

உனக்குள் நான்...!!!


உறைவிடம்...
தேடினேன்...
உன்னிடம்...
தேடி வந்தேன்...!!!

அனைத்துக்...
கொண்டாய்...
அளவாகப்..
பேசினாய்...!!!

ஆறுதல்...
ஆனேன்...
உன்னிடம்...
நானானேன்...!!!

என்...
உள்ளத்தில்...
மருந்தானாய்...
எனக்குள்...
நீ ஆனாய்...!!!

வாழ்க்கை...
பாடம் தான்....
கற்றுக்கொண்டேன்..
தினம்...
நான் தானே....!!!

அவள்...
சிரித்தாள்...
சிரிக்கின்றேன்...
அவள்...
அழுதால்...
அழுகின்றேன்...!!!

ஏன் தான்...
இந்த மாற்றமோ...
எனக்குள் வந்த...
புது...
நாட்டமோ...!!!

வாழ்கின்றேன்...
அவளுக்குள்..
வாழ்கின்றேன்...
மனதால்...!!!

அவளை எண்ணி துடித்தேன்..!!!



காலையில்...
ஒரு கனவு....
என்னை...
இழந்த ஒரு...
நினைவு...!!!

வந்ததொரு...
செய்தி...
என் உயிர்தோழி....
சொன்னாள்
ஒரு செய்தி...!!!

என்...
உயிரை உரித்தது...
உணர்வும்...
கொதித்தது...!!!!

என்னவள்...
வீழ்ந்த செய்தி...
என்னை...
பிளந்து...
சென்றது...!!!

அவள்....
ஒரு மலர்....
வாடாத மலர்...
வாடிய...
பொழுது...
நானும் வாடினேன்...
என்னை...
மறந்து...
நானும் தொலைந்தேன்...!!!

இன்று....
அவள் மீண்டும்....
பிறந்த பொழுது...
மகிழ்வாக...
நானும் பிறந்தேன்...!!!

என்...
பயணமும்...
தொடர்ந்தேன்...
விட்டதில்...
இருந்தே...!!!

உன் பார்வையில்...



கனவுப்...
பார்வையில்....
கண்டேன்...
தினம் உன்னை!!!

நினைவுப்...
பார்வையில்...
நின்றேன்...
உன் முன்னே...!!!

காதல்...
பார்வையில்...
கவி வடித்தேன்...
கண் முன்னே...!!!

உந்தன்...
பார்வையில்...
ஊமையானேன்...
தினம் நானே...!!!

உறவின்...
பார்வையில்...
உனதானேன்...
நான் தானே...!!!

வாழ்க்கை...
பார்வையில்...
தொடர்வாய்...
என் பின்னே...!!!

உலகப்...
பார்வையில்...
உனக்குள்...
நானானேன்...!!!

உண்மை...
பார்வையில்...
இருவரும்...
ஒன்றானோம்...!!!

இறைவன்...
பார்வையில்...
இணைந்தோம்...
புரிந்தோம்...
உறவானோம்...!!!

Friday, March 30, 2012

நான் கண்டவள்


தோகை விரித்து
சிறகினில்.....
மறைத்துக்கொண்டே
என்னுள்.......
 புதைந்துவிட்டவள்...!!!

கண்ணால்
கதை பேசி
இதயத்தில்
எனை சுமந்து
பகுத்தறிவில்
கலந்து விட்டவள்

நான்
பேசும் பொழுது
கணக்கெடுத்து
தான் பேசும்மொழியை
சுவையாய் தந்தவள்

என்னுள்
தன்னை புதைத்துக்கொண்டவள்
புரியாத புதிராக
 நான் வாடிய பொழுது
புதிராய் வந்து
ஒட்டிக்கொண்டவள்

இவள்
நான் கண்ட
புதுமைப் பெண்ணா
இல்லை நான்
போற்றும் புகழ்ச்சி பெண்ணா???

நான்
கண்டு கொண்டேன்
என்னுள் மட்டும்
அவள் இருப்பதை

இன்றோ
அவள் முகம் மலர்ந்தது
இந்த வரவுக்காகவே
வாழ்ந்தேன்
வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன்..........

நான் இருட்டில் வாழ்கின்றேன்


உலகம் பிரகாசித்தது
உண்மை தெரியாது
என்னை யாசித்தது
என் நிலைமை தெரியாது
காலை மாலை மாறிப்போனது
கனவுகளாக மட்டுமே.

எதையோ பறி கொடுத்தேன்
புரியாத புதிராக தினம் தினம்
நித்தம் ஒரு வாட்டத்தை கண்டேன்
என்னை உருக்க கண்டேன்.

இருட்டு பழகிப் போனதொன்று
என்னோடு ஒட்டிக்கொண்ட உறவு
வெளிச்சம் என்னைக் கண்டு
வெறுத்து ஓடும் உணர்வு

தேடுகின்றேன்
என்னை இழந்து தேடுகின்றேன்
என்னை மறந்ததால் வாடுகின்றேன்
என் பயணம்
இருட்டோடு சேர்ந்து கொண்டதால்??????

காதல்


கண்களால் பேசி
உடலால்
உருக வைத்துவிடும்


உண்மைகள்
செத்தாலும்
உயிர்கள்
உரித்தெடுக்கும்

காமங்கள்
வழியனுப்ப
துடிக்கும்
உணர்வுகளை
தொலைத்து விட்டு


தூக்கமும் சேர்ந்தே
நொந்து போகும்
நெஞ்சம்
வெந்தபடியே

இறுமாப்புக்
கொண்டது
இதயங்களை
கொன்று விடும்


உண்மைகள்
கசந்து எதையோ
உட்கொள்ள
துடித்து விடும்

ஆணும் பெண்ணும்
ஆரோக்கியமாக
பேசினர் அன்று
இன்றோ
அளவெடுத்துப்
பேசுகின்றனர்
கொச்சையாக.......

காதல்
முள்ளில் போட்டு
எடுக்க துடிக்கின்றோம்
நாடகங்களில்
வேஷங்கள்
போட்டு நடிகர்களாக??????

பார்வையின் தடங்கள்


இதயத்தில் விழுந்தாள் ,
இசையாய் விழுந்தாள்
இனிமையை தந்தாள்
என்னை வென்றாள்

அவன் கண்களால் பேசினாள்
கவிதை பிறந்தது
அருவியாய் விழுந்தாள்
இசையின் இனிமை பிறந்தது..

வித்தைக்காரி என்னை-
ஆட்கொள்ள தெரிந்த சூனியக்காரி
என்னில் தன்னை விதைக்க-
தெரிந்த விவசாயி.

பட்டாம் பூச்சிகள் விலகிச்-
செல்லும் அவளைக் கண்டால்
பொறாமை பிடிச்ச பூச்சிகள்
என்னவள் அழகைக் கண்டு
பொறுக்காத வண்ணத்துப் பூச்சிகள்,

ஆளப்பிறந்தவள்
என்னோடு வாழப் பிறந்தவள்
வாழ்வின் தத்துவமும் அவளே!!!

பாதைகள்


பகுத்தறிவில் கூட்டிச்
சென்றவள்.
பாதைகள் அளந்து
என்னை அள்ளிச் சென்றவள்!!!

முட்கம்பிகள்
நிறைந்த உலகத்திலே
பூக்கள் தூவி
புது வழி காட்டிய பூ அவள்!!!

காற்றின் திசை அறிந்து
வாழ்வின் தத்துவம்
சொல்லித் தந்த ஆசான் அவள்!!!

இன்று ஒரு வருடல்
என்னை அறியாமலே
ஒரு நெருடல்!!!
பாதைகள்....
தடம் மாறுகின்றனவா!!!

பாசத்தில் போடும் வேசங்கள்
விஷங்களாக சாய்ந்திடுமா?
தாகத்தில் தடங்கள் மாறிடுமா???
காலம் இட்ட கட்டளை
பாதைகள்....
விலகிச் செல்கின்றதே!!!
வாசல் கடந்து வாரித்தை கடந்து
கோலங்கள் சிதைந்து!!!

தெரியாது


திரும்பி பார்த்த பொழுது
திசை தெரியாத காற்றில்
மிதந்து சென்றாள்!!!

கைகளில்...
ஏதோ ஒரு குறுந்தகடு
கண்களில்...
மட்டும் ஏதோ கற்பனை
இவள் பாடம் படிக்கின்றாளா??
இல்லை என்னைப் படிக்கின்றாளா???

கன்னக் குழியில் என்னை வைத்து
கரம் ஆடுகின்றாளா.
மெதுமையான கை விரலால்.

நாணத்தால் வந்து.....
என் நாகரீகத்தை
கெடுத்து செல்கின்றாளே?
அவள் நாகரீகமானவளா???

கேள்விக்கணைகள் மட்டும்...
தெறிக்கின்றனவே
பதிலை தொலைத்துவிட்டு
தேடுகின்றேன் தெரியாமலே????

திருடி


தொலைத்து விட்டேன்
என்னில் எதையோ
தொலைத்துவிட்டேன்!!!

தூங்கப் போனேன்
தொலைந்தது தூக்கம்!!!
சாப்பிட வந்தேன்
தொலைந்தது பசியும்!!!

நடந்து சென்றேன்
கடந்து சென்று விட்டேன்
போகவேண்டிய இடத்தை
மறந்து சென்று விட்டேன்!!!

அவளின் ஒரு பார்வையில்
இவ்வளவு விசயமா?
இல்லை விஷமா???

கண்ணால் மட்டும் தானே
பேசினாள்.
கண்டபடி புலம்புவது நானல்லவோ!!!

காயங்கள் பட்டது போல்
ஏதோ ஒரு வலி கொல்லுதே
தினம் என்னை மெல்லுதே!!!

அவள் என்னிடம் இருந்து
எதனை எடுத்து சென்றாள்?
இல்லை......
இல்லை திருடி சென்றாள்!!!

ஓரப் பார்வையால்
ஒதுங்க வைத்தவள்
என்னை....
மயங்க வைத்தவள்!!!

தேடுகின்றேன்....
தொலைத்துவிட்டு தேடுகின்றேன்
எடுத்து சென்றவள்....
தூங்குகின்றாள்
தொலைத்து விட்டு..
ஏங்குகின்றேன்????

வாடும் மலர்


உரசிச் சென்றது..
உள்ளத்தில் நின்றே
கார்திகை தீபம் போல்
மனதில் ஒரு சுடர் ஒளி!!!

அளந்து பேசும் அவளோ...
எனக்கொரு அற்புதம்!!!
தென்றலை...
விழுங்கியவளா அவள்!!!
ஏக்கத்தில்...
தவிக்க விட்டது ஏனோ!!!

என் இதயம்....
அவளுக்கு புரியவில்லையா
புரிந்தும் நடிக்கின்றாளா???
என்னை விட...
பெரிய நடிகையா அவள்???

இல்லை ஒரு தலையாக வாழ்ந்து
நான் மட்டும் நடிக்கின்றேனா?
என்னவள் எனக்காக பூர்த்தவள்
கவிதை மலரவள்!!!

வருவாள் என் அருகே
தருவாள் தன்னையே
எனக்காக...
காத்து இருப்பேன் காலம் காலமாக!!!!!

நஞ்சான நட்பு


தோளில் கை போட்டு
நெஞ்சால் துடி துடித்து
என் கண்ணில் தூசி கண்டு
அவன் கண்கள் கலங்கியது
அதனை நினைத்தே...
என்னிதயம் வென்றது!!!

இன்றோ வாள் கொண்டு...
கழுத்தறுக்க துடிக்கும்
குணம் கண்டு...
என்னிதயம் வெந்தது!!!

கற்கண்டு...
பேச்சில் மயங்கினேன்
இன்றோ பேச்சுக்கு பேச்சு
விஷம் கண்டு
என்னிதயம் வெறுத்தது!!!

நட்பு ஒரு நாடகம் போல்
உரைத்தது...
உண்மையானர்வர்களை கூட...
இப்பொழுது என்னிதயம்
ஏற்க மறுக்கின்றதே
போலிகளை கண்டு கண்டு.

திமிர்


இருக்காதா
என்னிதயத்தில் இருந்து கொண்டு
என்னையே...
ஆட்டிப்படைக்கின்றாளே!!!!

கனவில்...
மட்டுமே உறவாடுகின்றாள்
கற்பனையில்...
மனம் மாற்றுகின்றாள்
தேவதயை சுமந்து...
தினம் வாடுகின்றேன் சுகமாகவே!!!

எத்தனை...
வடுக்கள் இதயத்தில்
என்னை மறக்க
ஏன் இந்த நாடகங்கள்!!!

அவளை சுமக்கின்றேன்...
என் இதயம் அடங்கும் வரைக்கும்
சுமப்பேன்...
வீணாகப் போகாது அவள் சுமை
சுமந்து கொண்டே இருப்பேன்...
அந்த திமிர் பிடித்த தேவதயை???

கண்


இதயத்தில்
பூட்டி வைத்து நித்தம்..
அழகு பார்க்கின்றேன்...

இதயத்தில்...
பூத்தவள் என்னோடு
மட்டும் வாழ்கின்றாள்....

யாருக்கும்...
வஞ்சமில்லை
என்னுடைய நெஞ்சத்தில் மட்டும்
அவள் வாழ்வதால்!!!.

யாருக்கும்...
பஞ்சம் இல்லை....
அவளிடம் நான் சேர்வதால்

கண்கள்...
எனக்கு கலங்கியதில்லை
பார்வையாக அவள் இருப்பதால்

தேவதை...
என்னை ஆண்டுகொண்டு....
இருக்கும் புதுத் தோகையவள்???

துடிப்பு


பகுத்தறிவு...
பாதை மங்கிய பொழுது...
கை பிடித்து கவிதை சொன்னவள்!!!

காலங்களை...
எனக்கு போதனைகாளாக...
படைத்து கொண்டவள்!!!

வீம்பு பண்ணி...
விளையாட்டாக என்னில்
மோதிப்பார்க்கும் தேவதை அவள்!!!

கள்ளம் கபடம்....
அறியாத பேதை அவள்..
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டவள்!!!

வசை பாடுபவர் முன்னே.....
என்னை திசை மாற்றிய...
என்னவள் அவள் தானே!!!

இன்றோ இதயத்தில்...
மட்டும் பூத்துவிட்டு...
என்னை தட்டுத் தடுமாற வைக்கின்றாளே!!!

பூவை...
கொய்யவும் முடியவில்லை...
பூவையவளை உணரவும்...
முடியவில்லை!!!

என்னவள்...
எனக்கானவள்...
என்னுள் புதைந்தவள்...
எனக்காக மட்டுமே பிறந்தவள்!!!

வாழ்வேன்...
என்னவளை இதயத்தில் மட்டும்....
சுமந்தே வாழ்வேன்...
என் இதயத் துடிப்பு அடங்கும் வரைக்கும்!!!

பார்வை


பகுத்தறிவு...
பாதை மங்கிய பொழுது...
கை பிடித்து கவிதை சொன்னவள்!!!

காலங்களை...
எனக்கு போதனைகாளாக...
படைத்து விட்டவள்!!!

வீம்பு பண்ணி...
விளையாட்டாக என்னில்
மோதிப்பார்க்கும் தேவதை அவள்!!!

கள்ளம் கபடம்....
அறியாத பேதை அவள்..
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டவள்!!!

வசை பாடுபவர் முன்னே.....
என்னை திசை மாற்றிய...
என்னவள் அவள் தானே!!!

இன்றோ இதயத்தில்...
மட்டும் பூத்துவிட்டு...
என்னை தட்டுத் தடுமாற வைக்கின்றாளே!!!

ஏக்கம்


நானாக...
தேடிப்போய் இழுத்து வந்து
அடைத்தேன் என் இதயத்தில்
அவளை மறக்க முடியாத
ஒரு ஏக்கம்!!!

பாலை வனமாக...
நான் உணர்வதே
அவள் மௌனத்தில்
நான் சிதையும் தாக்கம் !!!

எத்தனை முறை....
என்னை எரித்துக்கொள்வேன்
என்னையே நான் மறந்தே!!!

காலம்...
இட்ட கட்டளையா
கனவில் மட்டும் நான்
படும் தண்டனையா ??!!!

தீயே...
நீ கூட துரோகம் செய்யாதே
என்னை எரித்துச் செல்
இல்லை அவளிடம் தூது செல்!!!

எரிந்து கொண்டு இருக்கும்...
என் இதயம்... தீயையும் எரிக்கும்
என்று உரத்துச் சொல்!!!

அவள்...
எனக்கு மட்டும் சொந்தம்
எனக்குள் சொந்தம்
இல்லையேல் இல்லை என் உள்ளம்!!!

தவிப்பு


என்னால்...முடியவில்லை
என்னுள் புதைந்தவளை...
மறக்க முடியவில்லை!!!

ஏதோ ஒரு...
கண்ணீர் குவளை...
என் கண்களில்....
ஏன் தான் கொட்டியதோ!!!

நித்தம்....
நீராவியாகி என் மேல்...
ஏன் தான் முட்டியதோ!!!

பாவியவள்...
தூக்கத்தை கெடுத்து...
துண்டாடுகின்றாள்...
என் இதயத்தையே!!!

நெருப்பில்....
தூங்குகின்றேன்....
நினைவெல்லாம்..
அவளை சுமந்தே!!!

நீ மட்டும்....
என்னை கொளுத்திவிட்டு...
நிம்மதியாக தூங்குகின்றாய்..
என்னவளே!!!

இதயம்...
கனக்கின்றது...
உன்னை நான்...
சுமப்பதால் இல்லை...
உன் உயிரை நீ வெறுப்பதால்!!!

என் உயிர்த் தோழி


என்னுள்....
புகுந்து விட்ட...
இன்னுமொரு உறவு!!!

என்....
வேதனை கண்டு...
துடித்த என்னுயிர் அவள்!!!

காலம்....
அவளை...
கை பிடித்து தந்தது!!!

என்...
உயிர்த் தோழியாக...
உறவாட வைத்தது!!!

என்...
சுமைகளை அவளும்....
சுமந்தாள் கண்ணீரோடு!!!

என்....
மூச்சு அடங்கும்....
ஒரு நாள்....
அன்றும் தொடர்வாள்...
என் மூச்சுக்காற்றோடு!!!

கனா கண்டேனடி தோழி.


கலங்கரை...
விளக்கு...
வா என்று அழைத்தது!!!

கால்கள்...
என்னை நோக்கி...
போ என்று சொன்னது!!!

வாடிய பயிர்கள்...
பச்சை பசேல் என்று...
கண்ணை உரசியது!!!

நாடெல்லாம்...
பொன்மாரி பொழிந்தது....
உவகையோடு!!!

நெஞ்சில்....
வஞ்சமில்லா மனிதர்கள்...
உலா வந்தனர் உண்மையோடு!!!

பாசங்கள்....
வேசங்கள் மறந்து ...
கை கோர்த்துக்கொண்டது!!!

என்ன அதிசயம்....
எல்லாமே சொர்க்கமாக....
தெரிந்தது...
நரகங்கள் தொலைந்து!!!

நடை...
பாதைகள்...
வெறிச்சோடி...
பதை பதைத்தது!!!

குடும்பங்கள்....
கூட்டுக் குடும்பங்களாகி
கண்ணைப் பறித்தது!!!!

எல்லாமே....
என்னை சுற்றி...
நன்றாக நடந்தது...
தூக்கத்தில் மட்டும்!!!

புதுமைப் பெண்


பாரதி கண்ட...
தமிழ்...
புதுமைப் பெண்கள்...
தடம் பதிக்க....
தொடங்கி விட்டார்கள்...
உலகெல்லாம்....

அடிமை....
விலங்குடைத்து....
விலங்கு போட்டு....
இழுத்துச் செல்லும்....
துணிவும்
பிறந்து விட்டது...
எங்கள் மாதர்களுக்கு!!!

குத்து விளக்காக.....
வாசல் படி தாண்டா....
எரிந்து கொண்டு இருந்த...
தேவதைகள்...
இன்று வேதனைகள் கண்டு....
துடித்து....
வேங்கைகளாகவும் ....
மாறியும் விட்டார்கள்!!!

எங்கும்....
பெண்கள் சாதனைகள்....
எல்லாம் ஆண்களிடம்....
கண்ட வேதனைகள்!!!

பூட்டிக்கிடந்தவர்கள்....
பூகம்பம் ஆனார்கள்....
இன்று....
புரிந்து கொண்டார்கள்...
திமிர் பிடித்த...
ஆடவர் இனம்...
பாரதி கண்ட புதுமை....
பெண்களை...
புரிந்து கொண்டார்கள்...!!!

என் அழகு தாரகை அவள்


நிலவைப் பார்த்து....
சொக்கிப்போய்...
நின்றேன் பல முறை!!!

நதிக்கரை....
ஓரத்தில்...
நான் நடந்தேன்...
என்னை மறந்தே!!!

உலக....
வரை படத்தை
உட்காந்தே...
ரசித்தேன்...
உண்மையாகவே!!!

காதல்....
வார்த்தைகள் கேட்டு...
எனக்குள்...
சிரித்துக்கொண்டேன்!!!

அழகிகளை....
கண்டதுண்டு...
அவர்களிடம் அறிவை.....
கண்டதில்லை!!!

ஆளுமை...
கண்டதுண்டு...
பெண்மையை...
கண்டதில்லை!!!

என்....
இதய தேவதையிடம்...
எல்லாம் கண்டேன்...
அவள் அழகும்...
அறிவின் முன்னே ...
தோற்றுப் போனேன்.
என்னை இழந்து!!!

அவள்...
என்னிதயத்தை...
அலங்கரித்தாள்...
அந்த அழகுத் தாரகை...
என்னையே.....
அலங்கரித்தாள்...
புன்னைகை...
என்னும் பொன்னகையால்...!!!

இராட்சசி


என் எலும்பை...
உருக்கி...
சுவை பார்க்கின்றாயா?!!!

உன்...
விரதம் முடியவில்லையா...
இரத்த பசி அடங்கவில்லையா?!!!

காதல் கொண்டேன்...
கனவில் தினம் மிதந்தேன்...
உன்னால் இன்று தவித்தேன்!!!

உண்மையை சொல்லடி....
என்னவளே...
உண்மையை...
மட்டும் சொல்லடி...
உனக்குள் நான் தான்...
துணிந்து சொல்லடி
என்னவளே!!!!

பாடையில் ஏற்ற....
துணிந்து விட்டாய் இராட்சசி...
போக முடியவில்லை..
உன்னை தவிக்க விட்டு!!!

காலத்தில் என்னை
ஆளும் வேதனை தான்....
அடங்கட்டும்....
எனக்குள் அடங்கட்டும்!!!

என்னுயிர்...
அழிந்து போகட்டும்...
உன் நினைவு அழியா...
என் உடல் மட்டும் அழியட்டும்!!!

எனக்குள் ஓர் கடிதம்


முகவரி...
தொலைத்து விட்டு...
முகவுரை தேடுகின்றேன்!!!

காதலை....
மூடி வைத்து....
கவியுரை வடிக்கின்றேன்!!!

இதயத்தில்...
கோயில் கட்டி...
சாமியை தேடுகின்றேன்!!!

காலத்தை...
தொலைத்துவிட்டு...
கருணையாய் பாடுகின்றேன்!!!

என்னவள்...
விலாசம் எனக்குள்...
மறைத்து வைத்து...
எங்கேயோ வாடுகின்றேன்...

அவள்....
ஒரு நிலவு...
ரசிக்கின்றேன்...
தினம் தினம்....
வசிக்கின்றேன்...
அவள் மோகத்தில்...
என்னையே மறந்து!!!

பாவம் அவள்...
பார்வையில்...
கள்ளம் இல்லை....
கருணை உள்ளம்...
மனதில்....
வஞ்சம் இல்லை!!!

எனக்குள்...
ஏன் இந்த வஞ்சம்...
அவள் வார்த்தையில்...
நான் கொண்ட தஞ்சமா?...

எனக்குள்...
ஏதோ ஒரு மாற்றம்...
என்னை அறியாது...
ஒரு வாட்டம்...
அவள் மேல் ஒரு நாட்டம்!!!

தூது...
செல்லாயோ தென்றலே....
என்னவள் விலாசத்தை....
தேடிச் செல்லாயோ....????

அற்புதம்


எத்தனை....
ஜென்மம்....
வேணும் எனக்கு....
என்னிதயத்தில்...
உன்னை சுமக்கவே!!!

அத்தனை...
ஜென்மமும் போதுமா...???
உன்னைத் தான்...
நான் மறப்பதற்கு!!!

பாவை....
உன்னை...
அடைத்து வைத்து....
அழகு பார்க்கின்றேன்....
என்னை...
மறைத்துக்கொண்டே!!!

உன்...
உதடுகளில் இருந்து....
உதிரும் வார்த்தைகள்...
என்னை...
தாலாட்டுகின்றதே!!!!

கண் திறப்பதற்கு.....
மனமின்றி....
தவிக்கின்றேன்....
உன்னைத் தவிர....
வேறு எதுவுமே பார்க்க.....
விருப்பம் இன்றி....
துடிக்கின்றேன்!!!

காலம்...
ஓடும் பொழுது...
என்னிதய துடிப்பும்....
சேர்ந்தே துடிக்கின்றதே!!!!

ஏன் இந்த...
மயான வேதனை....
எனக்குள் மட்டும்...
எதற்கு சோதனை!!!

என்னவளே....
நீ என்னுடைய....
அற்புதம்....
நீ இன்றி...
எனக்கேன்...
சுயம் வரம்!!!

வேண்டாம்...
சுயநலம்....
என்னவளே...
தொந்தரவு...
பண்ணேன் உன்னை....
என்னில் நீ வாழ்வதால்...!!!

மகாராணி


என்னை....
ஆளும் தேவதையே....
எனக்குள்...
ஏன் வந்து புகுந்து...
கொண்டாய்!!!

பாதையில்....
போனவனை ஏனடி...
உன் வலையில்...
இழுத்துக் கொண்டாய்!!!

நெற்றி....
வேர்வை சிந்தி...
உழைத்தவன் நான்....
இன்றோ...
உன் நினைவில்...
நிரந்தரமாக...
அழிகின்றேன்!!!

ஆழப் பிறந்தவள் நீ....
என்னை...
அழவைக்க...
பிறந்தவளும் நீயே!!!!

அழுவதிலும்...
ஒரு சுகம்...
உன்னால்..
அழுவதிலும்...
ஒரு சுகம் தான்!!!

காதல்....
கோட்டையில் நீயோ....
ஒரு ராணி.....
எனக்குள்....
பூத்துக் குலுங்கும்....
மகரந்தமும் நீயே!!!

முடி...
சூடத்தான் தான்...
துடிக்கின்றேன்.....
உனக்கு மாலை சூடி....
மகுடம் சூடவே...!!!!

ஓவியம்

என்னில்...
பூத்த ஓவியம்...
கண்ணீரில்...
கரைந்ததோ காவியம்!!!!

நான் தீட்டினேன்-
அவள்...
நினைவினால்...

நிம்மதி இழந்தேன்....
அவள் பாசத்தாள்!!!

அவளால்..
பல...
கவியுரை வடித்தேன்...
கல்லறைக்கு....
சொந்தமாகுமோ...???

புவியுரையில்...
முகம் புதைத்தேன்....
புன்னகையில்....
என்னை....
அணைத்துக்கொண்டது!!!

புரியாத...
புதிரா அவள்...
புன்னகையின் மலரா....
இல்லை....
என் சமாதியில்....
சிரிக்கப்போகும் உறவா...???

பாவத்தின்..
சுடர் அவள்....
என்னில் படர்வாள் அவள்....!!!!

உறைந்தது இதயம்


காற்று...
வேகத்தில்...
வந்த ஒரு செய்தி...
கண்ணை...
பறித்தது...
நிம்மதி...
தொலைந்தது...!!!!

நினைவே....
ஆடியது...
நின்று போகத்...
துடித்தது...!!!

அவள்...
காலில்...
வந்த துன்பம்....
என் கண்ணை...
அறுத்துச் சென்றது...!!!

அங்கே...
இரத்த நாளங்கள்....
தெரிந்தது...
இங்கே...
இதய...
நாளங்கள்...
அறுந்தது...!!!

கடவுளின்...
சோதனை...
கணக்கற்றுப்...
போனதா?...
இல்லை...
கவலையற்றுப்...
போனதா...!!!

கடவுளை....
நம்புகின்றேன்....
அவனோ...
கதை...
முடிக்கப்....
பார்க்கின்றான்...!!!

அவள்...
வரவுக்காக...
காத்து நிற்க்கின்றேன்...
வந்தததும்....
மீண்டும்...
வருகின்றேன்...!!!

என்னவளின் மனது...


பூக்களே...
தோற்றுவிடும்...
பூவையின்...
இதயத்தில்...!!!

கபடம்....
அற்ற...
கலக்கமற்ற...
கவிதை...
அவள்...!!!

நித்தம்...
அவள் நினைவுகள்...
துடிக்கும்...
உலகைப்...
பார்த்தே...!!!

தூங்காது...
அவள் விழிகள்...
துயரம்...
கண்டால்...
அடங்காது...
அவள்...
இமைகள்...!!!

பார்வைக்கோ...
ஒரு...
தேவதை...
பகுத்தறிவில்...
அவள் ஒரு....
தாரகை...!!!

நொந்தவர்களுக்கோ...
அவள்...
ஒரு...
ஒளி விளக்கு...
தீபம்...
ஏற்றிடும்...
திருவிளக்கு...!!!

அடுத்தவர்...
இதயம்...
நொந்தால்...
துடித்திடும்...
தூயவள்...!!!

எனக்குள்....
புகுந்து விட்ட...
புதியவள்...
புயலவள்...
புரியாதவர்களுக்கு...!!!

உன்னோடு தான்...!!!


உறவாடும்....
உணர்வும்...
உன்னோடு...
தான்...!!!

உள்ளம்...
பேசும்...
வாய்ப்பும்...
உன்னோடு...
தான்...!!!

கடவுள்...
தந்த வரமும்...
உன்னோடு...
தான்...!!!

கடந்து...
போகத் துடிக்கும்...
கணமும் ....
உன்னோடு...
தான்...!!!

காடும் மேடும்...
உன்னோடு...
தான்...!!!

களைந்து...
போகத் துடிக்கும்...
நினைவும்...
உன்னோடு...
தான்...!!!

காதல்....
பாட்டும்...
உன்னோடு...
தான்...!!!

விழிகள் கொண்டு....
வலிகள்...
போக்கியவளே...
பணிவேன்...
இன்று...
உன்னோடு...
தான்....!!!

கவிதை...
சொல்லும்....
தேவதையே ...
என் கவிதை....
சொல்லும்...
தேவதையே...
காலமெல்லாம்...
உன்னோடு...
தான்...!!!

Tuesday, March 27, 2012

மஞ்சள் நிலா



பொன்னவள்...
பொன்னிறத்தில்..
புண்ணியம்...
செய்ததோ ...
அவள் மேல்...
புதுமையா...
படர்ந்திடவே!!!

காரிகை....
கை பட்டு...
அழகில் தான் ...
புதைந்து...
கொண்டதோ...
தோரணையில்..!!!

முதுமை....
கொண்ட...
என்...
இதயம் மட்டும்...
வாடுகின்றதே...
அவள் வரவு இழந்து!!!

நிலா...
மஞ்சள் நிலா...
புன்னகை...
சொட்டும்...
புதிய நிலா..!!!

அவள்...
கை விரல் பட்டு...
என்...
இளமை ...
ஊஞ்சல் ...
ஆடுகின்றதே..!!!

உன்னிதயத்தில்...
என்னிதயம் மோதி...
பரிசுத்தமானதே..!!!

பைங்கிளியே...
உன்...
வரவுக்காக...
ஏங்குகின்றேன்....
வருவாயா...
உன்னைத் தருவாயா....!!!

இறைவனுக்கு ஒரு கடிதம்.

கலங்கிய....
கண்கைளின்...
கசிவை எடுத்து....
மையில் தோய்த்து...
நான்....
வரையும்..
ஒரு மடல்...
என்னவளுக்காக...!!!

பாவத்தில்....
தினம்...
பள்ளி கொள்கின்றேன்...
அவள்...
மோகத்தில்...
தினம்...
என்னைக் கொல்கின்றேன்...!!!

கண்களைக்...
கட்டிக்கொண்டு...
என்னையே...
நொந்துகொள்கின்றேன்....
கவிகளை வடித்து...
கண்ணீரோடு....
சேர்த்துக் கொள்கின்றேன்...!!!

காலங்களில்...
என்னுள்....
கலந்துவிட்டவள்...
தேவதையாக....
உருவம்...
எடுத்துக்கொண்டவள்...!!!

இன்றோ...
புரிந்து கொண்டவள்...
புரிந்தும் புரியாத....
புதிராக வாழ்கின்றாளே...!!!

புதுமை கொண்ட...
என்னுள்ளம்...
அவளுக்காக....
மட்டும்...
பூக்கட்டும்...
புனிதமாகவே...!!!

அழியாத காதல்



காதலர் தினம்...
எனக்கும் உனக்குமா..???
இல்லை....
வருடம் வருடம் ...
காதல்...
செய்யும் தோழர்களுக்கா...!!!

நெஞ்சிலே...
தினம் தினம் ....
கொண்டாடுகின்றேன்....
உனக்காக...
காதல் தினம்....
அதிலே...
எங்களுக்கேன்...
தனியான தினம்...!!!

வாழ்வே....
ஒரு தேரோட்டம்....
நீ தானே...
என் பூந்தோட்டம்...
உன்னை....
காப்பது தானே...
என் கால ஓட்டம்..!!!

காதலர் தினம்....
கனவுகளில்...
மிதப்பவருக்கு...
காணிக்கையாகட்டும்...!!!

உன்னை...
தினம்...
சுமக்கும் எனக்கோ...
தினம் தினம்...
காதலர் தினம் தானே...!!!!!!!!!!!!

தனிமையும் இனிமை

எனக்குள்...
நான் ...
போட்டுக்கொண்ட வேலி...

காலம்...
கை...
விலங்கிட்டது...
கனவுகள்...
துரத்தி வந்து ....
என்னை ...
பூட்டி...
வைத்தது ...
ஊமையாக...!!!

தினம்...
அவள்...
வேதனை...
எனக்கு...
மட்டுமே...
சொந்தமானதே...!!!

புரிந்து...
கொண்டவள்....
புரியாத மாதிரி...
நடிக்கின்றாளே...
புழுவாகத் துடிப்பது...
நான் தானே...!!!!

தனிமை...
நான் விரும்பும்...
கோயில்...!!!

எனக்குள்...
முடியட்டும்...
ஆராதனை....
தனிமையா....
போகாது ...
என் வாழ்வு...
எனக்குள்..
நீ இருப்பதால்...!!!

உயிரின் துடிப்பு



நிலவுக்கு...
பக்கத்தில்...
நின்று கொண்டு...
குளிர்மை...
தேடுகின்றேன்...!!!

உறவுக்கு...
பக்கத்தில்....
நின்று கொண்டே...
உண்மை...
தேடுகின்றேன்...!!!

விபரம்...
தெரிந்துகொண்டும்...
விண்ணைத்....
தொட...
நினைக்கின்றேன்...!!!

வீணான நாட்கள்...
என்றும்....
என்னை நானே...
சுட்டுக்கொள்கின்றேன்...!!!

தண்ணீரில்...
தவம்...
இருக்கின்றேன்...!!!

கண்ணீராய்...
ஓடுவதனால்...
தானோ...
நானும்...
இருக்கின்றேன்...!!!

நாட்கள்...
முழுவதுமே...
ஏதோ..
ஒரு துடிப்பு...!!!

அவளை...
நினைத்து
வாடுவதால் தானோ ...
எனக்குள் ஒரு...
படைப்பு...!!!

இறைவன்...
அவளைப் படைத்தான்....
எனக்குள்...
ஓட விட்டான்...!!!

என் உயிர்...
அவளுக்காக...
துடிப்பதற்காகத் தானோ...!!!