உலகம் பிரகாசித்தது
உண்மை தெரியாது
என்னை யாசித்தது
என் நிலைமை தெரியாது
காலை மாலை மாறிப்போனது
கனவுகளாக மட்டுமே.
எதையோ பறி கொடுத்தேன்
புரியாத புதிராக தினம் தினம்
நித்தம் ஒரு வாட்டத்தை கண்டேன்
என்னை உருக்க கண்டேன்.
இருட்டு பழகிப் போனதொன்று
என்னோடு ஒட்டிக்கொண்ட உறவு
வெளிச்சம் என்னைக் கண்டு
வெறுத்து ஓடும் உணர்வு
தேடுகின்றேன்
என்னை இழந்து தேடுகின்றேன்
என்னை மறந்ததால் வாடுகின்றேன்
என் பயணம்
இருட்டோடு சேர்ந்து கொண்டதால்??????
No comments:
Post a Comment