கண்களால் பேசி
உடலால்
உருக வைத்துவிடும்
உண்மைகள்
செத்தாலும்
உயிர்கள்
உரித்தெடுக்கும்
காமங்கள்
வழியனுப்ப
துடிக்கும்
உணர்வுகளை
தொலைத்து விட்டு
தூக்கமும் சேர்ந்தே
நொந்து போகும்
நெஞ்சம்
வெந்தபடியே
இறுமாப்புக்
கொண்டது
இதயங்களை
கொன்று விடும்
உண்மைகள்
கசந்து எதையோ
உட்கொள்ள
துடித்து விடும்
ஆணும் பெண்ணும்
ஆரோக்கியமாக
பேசினர் அன்று
இன்றோ
அளவெடுத்துப்
பேசுகின்றனர்
கொச்சையாக.......
காதல்
முள்ளில் போட்டு
எடுக்க துடிக்கின்றோம்
நாடகங்களில்
வேஷங்கள்
போட்டு நடிகர்களாக??????
Super Quotes
ReplyDelete