Sunday, April 8, 2012

உன் பார்வையில்...



கனவுப்...
பார்வையில்....
கண்டேன்...
தினம் உன்னை!!!

நினைவுப்...
பார்வையில்...
நின்றேன்...
உன் முன்னே...!!!

காதல்...
பார்வையில்...
கவி வடித்தேன்...
கண் முன்னே...!!!

உந்தன்...
பார்வையில்...
ஊமையானேன்...
தினம் நானே...!!!

உறவின்...
பார்வையில்...
உனதானேன்...
நான் தானே...!!!

வாழ்க்கை...
பார்வையில்...
தொடர்வாய்...
என் பின்னே...!!!

உலகப்...
பார்வையில்...
உனக்குள்...
நானானேன்...!!!

உண்மை...
பார்வையில்...
இருவரும்...
ஒன்றானோம்...!!!

இறைவன்...
பார்வையில்...
இணைந்தோம்...
புரிந்தோம்...
உறவானோம்...!!!

No comments:

Post a Comment