Tuesday, January 22, 2013

எழுதுகோல் கரைகின்றது...!!!



உன்
நினைவில் கரைந்தது
என் இதயம்
ஏக்கத்தில் தினம் ஒரு
கவிதை வடித்தேன்
இன்று கரைகின்றதே
என்
எழுதுகோலும் சேர்ந்தே...!!!

கூட்டம் கூடி
ரசித்துதானே சுவைத்தனர்
எழுதுகோல் வடித்த
கண்ணீரை முகர்ந்து
பார்த்துத் தானே
மலர்ந்தனர்
கண்ணீர்க் கசிவுகள் சொன்ன
கதைகள் தான்
எத்தனை எத்தனையோ
காவியம் ஆகாத
கருங்கல் சிற்பங்களாக...!!!

முற்றத்து நிலாவை
புன்னகையால்
புரிந்துகொண்டு புதிர் போட்டு
நான் அழைக்க
கண்ணசைவில்
கௌவிக்கொண்டு தான்
சிரிக்க
கைகொண்டு நானும்
மடல் வடிக்க
கையும் முடமாகி
என் சிந்தனையும்
கரைந்து போனதே
எழுதுகோலும் என்னை
மறந்து போனதால்...!!!

No comments:

Post a Comment