கண்கள் மூடிக்கொண்டு...
விரல்கள்...
நொறுக்கிக்கொண்டு...
என்னை...
மறைத்துக் கொண்டு...
வடிக்கின்றேன்...
புதிய பல்லவி...!!!
வேதனையில்...
சூடு போட்டு...
விரக்தியில்...
ஆசை காட்டி...
விழுங்குகின்றேன்...
புதிய வார்த்தைகள்...!!!
எல்லாமே...
புது யுகம்...
மதிகள் மயங்கி...
தாலாட்டுப் பாடுதே...
தயங்காது...
கேள்விகள்...
வேள்வியாகிப்போனதே...!!!
பாரத்தை...
சுமக்கின்றேன்...
பாரங்கள்...
கூடிச் செல்வதால்...
முதுகெலும்பை...
முறிக்கின்றேன்....
முடியாததால் தானோ...!!!
இன்று மௌனமாக....
கழிக்கின்றேன் ...
மௌனத்தின் சுகம்...
என்னைச்...
சுற்றுவதனால் தானோ...!!!
காலங்கள் ஓடி...
என்னை...
கரை சேர்க்கட்டும்...
நான்...
அடங்கிப்போகும் முன்னே...!!!
No comments:
Post a Comment