Sunday, January 27, 2013

கவிதையும் காதலும்...!!!



வளர்ந்தது காதல்
மட்டும் இல்லை
கனவில் தோன்றிய
வரிகளில்
கவிதையும் தானே...!!!

கண்ணே மணியே என்று
வாய் முணுக்க
வண்ணத்து பூச்சி போல்
நீயும் சிறகடிக்க
மலர்கள் என் மேல் பட்டு
படபடக்க
மறந்தேனே பலநாட்கள்
கண்ணயர்ந்தே...!!!

காதும் காதும்
பேசிக்கொண்டன
உன் வாய் முணுப்பை
பார்க்கத்தானே கண்களும்
முழித்துக்கொண்டன
என் வார்த்தைகள் கூட
சிக்கிக்கொண்டன
உன் அழகுக்கு முன்
மௌனம்
தொற்றிக்கொண்டன...!!!

கவிதை வரைய
பேனா தேடுகின்றேன்
உன் கண் மைகள்
என் கைகளில்
கொட்டிவிடுவதால்
நானும் தடுமாறுகின்றேன்...!!!

இமை மூடி
என்னை வருடும் நீ
எனக்குள் புதைந்து
போகின்றாய் தினம் தினம்
கவிதையாகவே
நானும் மறந்து போகின்றேன்
உன் நினைவாலேயே...!!!

No comments:

Post a Comment