Sunday, January 27, 2013

நீ இல்லாத உலகம்...!!!



நிம்மதி தான் என்ன
விலையோ
நீ இல்லாத உலகத்தில்
என் மதியும் கேட்கின்றதே
விரக்தியில்
ஏதோ ஒரு உணர்வு பிறப்பதால்
இதயம் நொந்து தான்
தேடுகின்றதே...!!!

வெற்றுக் கிரகத்தில்
தனியாகப் புலம்புகின்றேன்
உன்னைக் காணாது
உறவாடத் தெரியாமல்
உணர்வாலேயே
புதைகின்றேன்
அடக்கம்
பண்ணத் தான் நீயும்
தேடிவருவாயோ என்னவளே
நானும் கேட்கின்றேன்...!!!

கடிதம் போட்டுத்தான்
தேடுவதற்கு
நீ தான் காத்து
இருக்கவில்லையே
கண்ணுக்குள் உன்னை
மூடி வைக்கத்தான்
என் கண்ணிலும் இடம்
இல்லையே...!!!

வருவாய் என்று
வாசல் கதவை மூடிவிட்டு
காத்து இருக்கின்றேன்
பைத்தியக்கார உலகத்தில்
நானும் ஒரு வைத்தியனாகவே...!!!

No comments:

Post a Comment