Sunday, January 27, 2013

மனைவி...!!!



குத்து விளக்குகள்...
அணைவதுண்டு...
குல விளக்குகள்..
அணைவதுண்டோ...!!!

திருமண பந்தத்தில்...
ஏற்றி வைத்த...
மனைவி என்னும்..
ஒளிவிளக்கால்....
பிரகாசமானது...
நானல்லோ...!!!

எத்தனை துன்பங்கள்...
விழுங்கிக்கொண்டு...
இன்பத்தை மட்டும்...
படைக்கின்றாளே...
யார் கொடுத்த வரமோ...!!!

பொறுமை...
இவர்களிடம் மட்டும்
மண்டியிட்டு ...
கிடக்கின்றதே...
எப்படி....
இவர்களிடம் மட்டும்...
சரணடந்ததோ...!!!

கருவில்...
என் உயிரை சுமந்து...
கெளரவம் என்னும்...
தகமை தந்து...
மனிதனாக இன்று...
உலா வருகின்றேன்...
மனைவி என்னும்...
தாய்மையால்...!!!

No comments:

Post a Comment