ஜெயிக்க தெரியாது...
உடைந்து...
போகத் துடிக்கும்...
முகங்கள் தானே...!!!
போலியான வேலிகளை...
போடத்துடித்து....
புழுங்கி வாழ்ந்து...
முகவுரை தொலைப்பதில்...
என்ன நாட்டமோ ...!!!
காலத்தோடு போராட...
கலக்கமா...
உனக்குள் தயக்கமா...
இல்லை....
கண்ணீரில் மட்டும்....
உறக்கமா...
ஏன் தான் இந்த...
ஏக்கமோ...!!!
கல்லடிகள்...
பட்டுக்கொண்டுதானே...
இருக்கும்...
சொல்லடிகள்...
தொடர்ந்துகொண்டு தானே...
இருக்கும்...
தூயவர்கள் வாழ்வோ...
மலர்ந்து கொண்டுதானே...
இருக்கும்...!!!
காண்ணாமூச்சி...
உலகம் தானே...
கவலை இல்லா..
மனிதனுண்டோ..
நீயும் தான்...
கண்டதுண்டோ...!!!
வாழும் வரை...
வாழ்ந்துடுவோம்...
தூக்கங்களோடு வந்த ...
துக்கங்களை...
தொலைத்துவிட்டு...!!!
No comments:
Post a Comment