Monday, January 28, 2013

கூட்டுக்குடும்பம்...!!!



தேன் கூடுகள்...
சுவை குன்றா...
தேன் கூடுகள்...
பாசப்பினைப்புகளால்...
தசை நார்கள்...
ஒட்டி உறவாடிய...
தேன்கூடுகள்...!!!

பரம்பரை...
பெயர் சொல்லியே...
நெஞ்சை நிமிர்த்தி...
பல கதைகள்....
சொல்லுமே...!!!

உறவுகள்...
சொந்தம் கூடி...
அழைக்கும் பொழுது...
இரத்த பந்தங்கள்...
சுண்டிப் பார்க்குமே...
சுகம் காணுமே...!!!

இன்றோ...
கதைகளில் மட்டும்...
படிக்கின்றோம்...
கண் மடல்களை...
அகல விரித்து...
படங்களில் மட்டும்...
பார்த்து ரசிக்கின்றோம்...!!!

எங்கே தொலைத்தோம்...
எங்கள் விழுமியங்களை...
பந்த பாசங்களை...
எங்கே தான்...
பறிகொடுத்தோம்...!!!

கண்டதுக்கும் ஆசைப்பட்டு...
காக்க வேண்டிய...
உணர்வுகளை...
காவு கொடுத்தோமே...
அழித்து விட்டோமே...
அறிவை அடைவு வைத்தே...
தொலைத்து விட்டோமே...!!!

பற்றி எரிகின்றது....
பேராசைகளினால்...
இழந்துவிட்ட...
இனிமையான வாழ்வை...
மீண்டும் பெற முடியா...
பற்றி எரிகின்றது...!!!

வேடிக்கை மனிதனே...
கூட்டுக்குடும்பம் ...
என்னும் தேன் கூட்டை...
குலைத்துவிட்டு...
ஒன்று சேர்க்க...
துடிக்கின்றோம்...
கிடைக்குமா அந்த வாழ்வு...!!!

No comments:

Post a Comment