ஆத்தங்கரையில் ஆடிப்போகும்
இடையவள் உன் தலையில் ஆடும்
சும்மாடு கொண்ட குடமதில்
துள்ளிக் குதிக்கின்ற நீரில்
உன் மேனி பட்டு
என் உள்ளம் நனைகின்றதே...!!!
கிறங்கிப் போகின்ற
உன் இடையில் என்
இதயம் பட்டு
நொறுங்கிப் போகின்றதே
நோகாத உன் பாதம் பட்டு
கசங்கிப் போகின்றதே
கணநொடியில்
உன் மடியில் என் மனமும்
தடு மாறுகின்றதே...!!!
பூக்கள் எல்லாம்
உன்னைக் கண்டு புன்னகை
செய்கின்றனவே
உன்னிடம் இருந்து
நறுமணங்கள்
பரவி அவர்களை
வாழ வைப்பதால் தானோ
மலர்களும் நாணம்
கொள்கின்றனவோ...!!!
வற்றாத அழகிய நதியே
உன் வருகைக்காக
என் விழிகள் வழிகின்றதே
உன்னைப் பருகத்தானே
உறக்கம் கொள்ளாது
உயிர் வாழ்கின்றேன்
என்னவளே
உனக்காகத் தானே நானும்
வாழ்கின்றேன் வருவாயா
உன்னைத் தருவாயா...!!!
No comments:
Post a Comment