ஒட்டி உறவாட
ஓடிவந்து
அணைத்துவிட்டு
கதிரவனைக் கண்டதும்
அவன் மேல்
மையல் கொண்டு
என்னை உதறிவிட்டு
ஓடி விடுவதில்
நியாயம் தானோ...!!!
காத்திருந்து கண்விழித்து
நான் இருக்க
காதல் என்று நீ வந்து
கட்டியணைக்க
எல்லாம் நீ தான்
என்று நானிருக்க
இருளைத் தந்தவன்
ஒளியக்காட்டியவுடன்
நீயும் மறைந்து
என்னையும்
மறந்து செல்வது
மர்மம் தானே...!!!
தூங்காத இரவுகள்
வந்து தாலாட்டுப்-
பாடுகின்றனவே
தாங்காத
நெஞ்சம் மட்டும்
தரம்கெட்டுப்-
போகின்றனவே
வாடாத மலர் நான்
வாடிப்போகின்றேனே
வந்தவழி நீயும்
சென்றதால்
மனம் சிதறி
ஆடிப் போகின்றேன்
யாருமற்ற நீரோடையில்
நானும் போகின்றேன்
என்னை இழந்தே...!!!
No comments:
Post a Comment