எத்தனை கொடூரம்
உள்ளுக்குள் புதைத்து வைத்து
மெல்லவும் முடியாது
விழுங்கவும் முடியாது
ஏங்கித் தவிக்கும்
தவிப்பில் தெரியும்
வலிகளின் ரணங்கள்...!!!
வாய்க்கு வந்தபடி
திட்டித் தீர்க்கும்
மௌனங்கள் முன்
கதறத் தெரியாது
கண்ணீரும் கண்டறியாது
துடித்துக் கொள்கின்றதே
சுகமான
சுமைகளுக்காகவா இல்லை
தூங்காத இரவுகளுக்காகவா...!!!
தினம் தினம்
பகட்டுக்காக
பதம் பார்க்கின்றார்கள்
எத்தனை தரம்
இடிதான் நேரடியாகத் தாக்குமோ
இல்லை அடிமேல் அடிவைத்து
வாழ்கையாக மாற்றிக்கொள்ளுமோ
வாயில்லாப் பூச்சியாக மட்டும்
மரணிக்க துடிக்கின்றதே
யாருக்காக இத்தனை மோகமோ...!!!
அழகான இதயம்
அரவணைப்பின்றி
அலங்கோலமாக
துடிக்கின்றதே என் கைகளுக்காக
பார்த்துக் காத்து நிற்கின்றதே
நிம்மதிக்காவது
அவள் இதயத்தை
வருடிப் பார்க்கின்றேன்
அவள் புன்னகைக்காக...!!!
No comments:
Post a Comment