Monday, February 11, 2013

அழகி....!!!!



செவ் வாலைத் தண்டிலே
உன்னை செதுக்கி
வைத்தவர் யார் தானோ.
கண்ணால் கண்டவுடன்
தடுமாறித்தான் போகின்றேன்
உன் பக்கம் வந்து நான்
மயங்கித் தான் சாய்கின்றேன் ...!!!

கூடுகட்டி அழகிய பூக்கள்
தொங்கும்
உன் கொண்டையிலே
என் கண்ணும் பட்டு
மெதுவாக உன் கழுத்து
சங்கைத் தான்
நோட்டம் இருகின்றதே
உன் உதட்டில் வழிந்து ஓடும்
சாயம் பட்டு
என் மனமும் தான்
மாறிவிடுகின்றதே...!!!

நங்கூரம் இட்ட
உன் இடையில் நான் தான்
கிறங்கிப் போகின்றேன்
நாடகம் ஆடும்
உன் கண் இமையிலும்
சிக்கித்தான் தடுமாறி
என்னை
மறந்து தான் சாகின்றேன்...!!!

அழகி என்று உன்னை
ஒற்றை வரியில்
சொல்லி விட ஏங்குதே
என் இதயம்
உன்னை ஒவ்வொன்றாக
வர்ணிக்கத் தான்
தடுக்கின்றதே என் மௌனம்...!!!

எனக்குள் புதைந்துவிட்ட
அழியாத அழகி நீ
பிரித்தெடுக்க முடியாத
புதுமை நீ
மனதுக்குள் மட்டும்
வர்ணித்துக் கொள்கின்றேன்
வெளியில் மற்றவர்களுக்கு
கேட்காமலேயே...!!!

No comments:

Post a Comment