Sunday, February 24, 2013

காலங்களில் அவள் வசந்தம்...!!!





பார்வைகள்....
பலவிதம்...
இவள்...
பார்வையோ...
தனி ரகம்...
கண்களே பல...
கதைகள் சொல்லுமே...!!!

காலத்தால் அழியாத...
சிரிப்பின்...
சலங்கை ஒலிதான்...
புது மொழியையே...
கற்பிக்குமே ...!!!

நாவடைக்க வைக்கும்...
அவள் பேச்சும்...
அன்பின் அடக்கமும்...
குழந்தை போல்...
நம்மை நினைக்க...
தோன்றுதே...!!!

நிம்மதி அவள்...
பக்கம் தோன்றி...
நம்பக்கம் ...
மறைகின்றதே...
மனம்...
சஞ்சலப்படுவதனால் தானோ...!!!

இன்றோ வஞ்சமில்லா...
உள்ளம் கொண்டவள்...
வாடுகின்றாள்...
யாருக்காக....
தவறே செய்யாது...
சவுக்கடியும் வாங்குகின்றாள்...!!!

அவள் பக்கம்...
நியாயம் இருப்பதால்...
காலங்கள் கடந்தாலும் ...
தர்மங்கள் கூட கை விடாது ...
அவள் பக்கம் சாய்ந்திடுமே...!!!

காலங்களில்....
வசந்தமானவள்...
நதியாக ஓடுகின்றாள்...
அவள் கண்ணீரை...
அருந்திவிட்டு...
அவளையாவது...
விட்டு விடுங்கள்...!!!

No comments:

Post a Comment