Sunday, February 24, 2013

புன்னகை துளிகள்...!!!





பூத்துக் குலுங்கியது....
பார்வையின் ...
பரிசத்தில்...!!!

இழந்ததை...
மீண்டும்...
பெற்றெடுத்தவள் போல்..
ஏதோ ஒரு...
புதிய சிந்தனை...
புன்னகையோடு...
தாக்குகின்றதே...
புதிதாக...!!!

காதல் துளிகளா...
இல்லை....
கனவு விழிகளா...
பார்த்து இருக்கும்...
எனக்கோ...
பன்னீர்த் துளிகளா...!!!

மோகப் பார்வையில்...
முகம்...
புதைத்து நிற்கின்றேன்...
அவள்...
புன்னகை தேசத்தில்...
என்னையே இழக்கின்றேன்...!!!

காயங்கள் படும்...
மானங்கள் கெடும்...
வார்த்தைகள்...
தடம் மாறி ...
வாழத்தான் முடியா...
மனம் போதனை செய்யும்...!!!

அவள் புன்னகையை ...
ஒருகணம்....
நினைத்துவிட்டால்...
புதிதாக...
பிறப்பது போல்...
ஒரு நினைப்பு வந்து...
ஒட்டிக் கொள்கின்றதே...!!!

நிரந்தரமான...
அவள் புன்னகை...
காணத்தான்...
என் மனமும் ஏங்குகின்றதே...!!!

தினம் ஒரு முறை....
அவள் புன்னகை...
துளிகள்....
என் மீது பட்டு...
தெறிக்கட்டும்...!!!

No comments:

Post a Comment