Monday, March 25, 2013

அன்புக்கு அடிமை...!!!



ஆளத் துடிக்கும்...
மனசுகள்...
அங்கலாய்க்க...
அலட்டிக்கொள்ளாது...
அமைதியாக..
அன்பை சுமக்கும்...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

காலை வாரி விட்டு...
சுகம் காணும்...
மானிடர் முன்னே...
தரும் வேதனைகளை...
மறந்து கை கோர்க்கும்...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

எங்கும் வஞ்சம்...
எதிலும் ஒரு ஏக்கம்...
இருந்தும் உண்மை....
மனிதனாக வாழும் ....
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

கண் மூடி...
கண் திறந்தால்...
காண்பதெல்லாம்...
வேடிக்கை தானே...
காலத்தின் நிலையறிந்து...
வாழும் மனித...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

அன்பையும் பண்பையும்...
தேடித் திரிகின்றான்...
இவனிடம்...
இல்லாததால் தானோ...
இவன்...
கண்களில் இருந்து...
ஒழிந்து மறைகின்றதோ...!!!

வாழ்வென்ற...
வட்டத்துக்குள் மட்டும்...
புதைந்து கொண்டோம்...
அதனால் தானோ...
மனித மனங்களை...
அறுத்து சுவைக்க...
பழகிக் கொண்டோமோ...!!!

எதற்கும் அடிமை...
இல்லா மானிடன்...
எங்கே காட்டுங்கள்...
அங்கே நான்...
அன்புக்கு...
அடிமையாகி விடுகின்றேன்...!!!

No comments:

Post a Comment