Monday, March 25, 2013

மன அழுத்தம்...!!!




மனதை நீ ...
இழந்து மற்றவரை...
துடிக்க வைப்பதில்...
சுகம் கண்டீரோ...!!!

செய்யும்...
பிழைகளில் இருந்து...
தப்பித்துக்கொள்ள...
போடும்....
வேஷங்களில்...
ஒரு வேஷம்..
இந்த வேஷமோ ...!!!

திட்டம் போடாது....
தினம் வாடி...
திடம் கொள்வதில்...
உன்...
சீற்றம் தான் என்னவோ...!!!

உன்னை....
கட்டுப் படுத்தாத...
சாடலை...
மற்றவரை...
மட்டுப் படுத்த...
நினைப்பது...
முறைதானோ...!!!

அமைதியையும் ...
பொறுமையையும் ...
உன்னை விட்டு...
தொலைத்துவிட்டு...
அடங்காது...
அடுத்தவர் மடியில்...
கை வைப்பது...
சரி தானோ...!!!

மனமோ மகுடி...
ஊதுகின்றதே...
அதன் பக்கம்...
வளைந்து ஆடுவதை...
நிறுத்திவிடு...
நிம்மதி...
உன் காலடியில்...
நிரந்தரமாக....
மண்டியிடுமே...!!!

No comments:

Post a Comment