Monday, March 25, 2013

நான் அழகில்லாதவளா...!!!


ஆண்டவன்...
அருளினால் பிறந்தேன்...
என்றும் பெற்றோரின்...
ஆனந்த உவகையில்...
நனைந்தேன் நான்...!!!

கருப்பு தேவதை...
நான் தான் என்று....
தினம் பெற்றோர்களும்...
மற்றோர்களும்...
எனக்கு சூட்டி மகிழ்ந்த...
பட்டங்கள் தானே...!!!

என் தாயின் உதட்டில்...
நனைந்தவள் ...
இன்றோ கண்ணீரில்...
நனைகின்றேன்...
என்னை அறியாது...
தினமும் கரைகின்றேன்...!!!

கட்டிக்க போறவன்...
கனவில் மிதந்தேன்...
அவன் நினைவில்...
தினம் என்னை மறந்தேன்...!!!

திருமண மேடை...
என் பக்கத்தில்...
நெருங்கிய வேளை..
மணவாளன் வார்த்தை கேட்டு...
நொறுங்கிப் போனேனே ...!!!

என் கனவில்...
என்னைத் தாலாட்டியவன்...
என் அழகை வர்ணித்து...
தூக்கி எறிந்தானே...
நொறுங்கிய இதயம்...
மீண்டும்...
உயிர் பெறவில்லையே...
ஊசலாடுகின்றேன் ....
உணர்வற்றவளாக...!!!

கடவுள்...
அமைத்து தந்த மேடை...
தரை மட்டமாகியது...
மறு மேடை தேடிப்போக...
மனமும் தடுக்கின்றதே...
மீண்டும் ஒருவன் ...
உதடுகளோ என் அழகை...
முனு முனுக்காது ஒழியட்டும்...!!!

No comments:

Post a Comment