வாழும் மனிதரை...
கண்டுவிட்டாலே...
உள்ளம் ஏதோ...
உவகை கொள்கின்றதே ...!!!
உண்மையை...
புரிந்தவர்....
உள்ளங்கள் தானே...
வாழ்ந்து வழிகாட்டி...
வாழ்வை விளக்கி...
சென்றனரே...!!!
யார் தொடர்கின்றனர்...
யாருக்காக மட்டும்...
வாழ்கின்றனர்...
காலங்கள் வாழ்வை ...
விதைக்கின்றனவே...
வினையா தினையா...
அறுப்பது தான்...
நம் கையில் புரியாத...
புதிராக இருப்பது...
புரியவில்லையே...!!!
தேடுகின்றோம்...
தேவையற்று...
வாடுகின்றோம்...
தேடி தேடி காலங்களை...
தொலைக்கின்றோம்...
கடைசியில் கையளவு ...
சாம்பலாக மிஞ்சி...
காற்றினில் கலந்தும்...
விடுகின்றோமே...!!!
இதற்காகத் தான்...
இத்தனை ஆட்டங்களா...
இலை உதிர்ந்தும்
மாறாத மாற்றங்களா...
பாடாய் படுத்தும்...
வாழ்வுக்காக...
இத்தனை ஓட்டங்களா...!!!
காலத்தை...
கனிவோடு பார்க்கத்தானே...
தவறி விட்டோம்...
காத்து இருந்த கண்கள்...
பூத்துக்கொண்டதால்...
மாறிவிட்டோமா...
இல்லை போட்டி போட்டு...
நடிப்பதில் மட்டும்...
கவனத்தை சிதற விட்டோமா...!!!
இருந்தும் மனதை...
வருடுகின்றதே ...
காலத்தை வென்று...
மனிதன்...
வாழப் பழகிவிட்டான்...
நினைக்கும் பொழுது...
உள்ளம் அமைதியாகின்றதே...!!!
No comments:
Post a Comment