Monday, March 25, 2013

சந்தோசம்...!!!





தாய்ப் பால்...
குடித்த பொழுது...
கவலை மறந்தோம்..
மழலையாக...
மண்ணில் தவழ்ந்தோம்...

பாடசாலை...
தொடக்கத்தில்...
பாடம் சுமந்தோம்...
நண்பர்கள் பக்கம்...
நட்பாய் நிமிர்ந்தோம்...!!!

காலங்கள்....
உருண்டதில்..
கவலையும் கண்ணீரும்...
சுமந்தோம்...
காரணம் இன்றி...
தினமும் வெந்தோம்...!!!

பாதைகள் தெரிந்ததும் ...
பயணங்கள்...
தொடர்ந்தோம்...
சந்தோசக் காற்றை...
தேடி அலைந்தோம்...!!!

இன்றும்....
தேடிக்கொண்டு தான்...
இருக்கின்றோம்...
எங்களுக்குள்...
ஒழிந்து இருக்கும்....
சந்தோசங்களை...
தேடாது வெளியில்...
தேடுகின்றோம்...
பித்து பிடித்த மனிதர்களாக...!!!

சந்தோசங்களை...
காசு கொடுத்து...
வாங்கத் துடிக்கின்றோம்...
எங்களை சுற்றி..
இருந்த இன்பங்களை...
தொலைத்துவிட்டு...

புரிந்த உலகத்தில்...
புரியாது நடிக்கின்றோம்
புதுமைகளுக்கு...
மயங்கியே...
எல்லாவற்றையும்...
தொலைக்கின்றோம்...!!!

காலம் காலமாக...
சபிக்கின்றோம்...
பேராசைகளை...
விழுங்கிக்கொண்டே...
எதுவும்...
கிடைக்காதது போல்...
போட்டி போட்டு...
நடிக்கின்றோம்...
நாம் எல்லோருமே...!!!

No comments:

Post a Comment