Monday, March 25, 2013

தமிழன் முதுகு...!!!



பழக்கப் பட்டு ...
விருப்பப் பட்டு...
என்றென்றும்...
தொடரும்...
இடம் தானே...!!!

கட்டியணைத்து...
முத்தமிட்டு...
கதைகள் பல பேசி...
பின்பு கை...
வைக்கத் துடிக்கும்...
இடமும் அது தானே...!!!

தன்னினத்தை...
அழித்து
பிற இனத்தின்...
வாழ்வுக்கு...
வழி காட்டிடும்...
உன்னதத் தமிழர்கள்...
உலகில்...
எத்தனை எத்தனையோ...!!!

தமிழன் வளர்ச்சி...
தமிழனுக்கே...
பய கிளர்ச்சி...
தூங்காது...
வாட்டி வதக்கிடும்...
பழக்கப்பட்ட..
அவன் குணமும்...
வேறு யாருக்குத் தானோ...!!!

கல்தோன்றா ...
மண் தோன்றா ...
காலத்து இனத்துக்கு...
ஒரு கல் பூமி கூட...
சொந்தமில்லையே...
முதுகுகள் மட்டும்...
சொந்தமானதால் தானோ...!!!

முகவுரைகளை...
மாற்றித் தானே...
பழகிவிட்டோம்...
தமிழன் வார்த்தைகளை...
தரம் கெட்டதாக...
எண்ணிக்கொண்டே...
தவறான விதைகளை..
விதைத்து...
வினைகளை மட்டும் தானே
அறுவடை...
செய்துகொண்டோம்...!!!

காலங்கள்...
பல கதைகள்...
கூவுகின்றன ...
தமிழன் வாழ்வு...
விடியும் நம்பிக்கை...
பிறக்கும் பொழுது...
கூறிய வால்கள்...
குரல்வலையை...
தமிழில் பேசியே ...
அறுத்துச் செல்கின்றதே....
விடியுமா தமிழன் வாழ்வு...!!!

No comments:

Post a Comment