Wednesday, March 27, 2013

மெழுகுவர்த்தி...!!!





அமைதியாகி...
யாருக்கும்...
அடி பணியாது...
நிமிர்ந்து நின்று...
ஒளியாகி...
கை கொடுத்து...
மற்றோர்...
வழிகாட்டியாக...
வாழ்ந்திடும்...
புதுமை தானே....!!!

கண்ணீர்களை...
அடக்கிக்கொண்டு...
பன்னீர்களாக...
வாசனை வீசும்...
உள்ளங்கள்...
உண்மையில்...
யாருக்காகவோ...!!!

நித்தம் ஏதோ...
சில...
புயல் காற்றுக்களும்...
அடை மழைகளும்...
தாக்கிடுமே ...
இவர்கள் எண்ணம்...
புரியாமலே...
வேதனைகளை...
கொட்டிவிட்டு...
போய்விடுமே...!!!

தனிமை...
இவர்களுக்கு...
பிடித்துப்...
போய் விட்ட பாதையா...
நேரம் கூடி வரும்...
என்று கனவு காணும்...
தேவையா...!!!

தங்களை...
உருக்கிக் கொண்டு...
என்ன தான் சுகம்...
காண்கின்றார்களோ...
இன்பத்தில் மட்டும் ...
எப்படித்தான்...
வாழ்கின்றார்களோ...!!!

போதனை வாழ்வில்...
பழகிப்போனவர்கள்...
வசந்தங்கள்...
இவர்கள் பக்கம்...
திரும்பாது...
போவதில் தான்...
என்ன மாயமோ...!!!

புயல் காற்றுக்கள்...
இவர்கள் பக்கம்
வீசாது திரும்பி போய்...
இவர்களை...
வாழ விடுமா...!!!

No comments:

Post a Comment