Wednesday, March 27, 2013

கடல் அலைகள்...!!!



கரையத் தொட்டு...
என்ன தான்...
சொல்லிப் போகின்றாய்...
நீ செய்தி...
சொல்கின்றாயா...
இல்லை...
கண்ணீர் ஓவியம்...
வரைந்து செல்கின்றாயா...!!!

துள்ளி வரும்...
வெள்ளலையே...
தூது கொண்டு வரும் ...
உன் விழிகள்...
தூங்காது....
நனைகின்றதே...
எதற்காகத் தான்...
இந்த ஆர்ப்பரிப்போ...!!!

கல்லிதயங்களை...
கரைத்து விடப் ...
பார்க்கின்றாயா...
கரையாதது என்று...
தெரிந்தவுடன்...
திரும்பி...
போகப் பார்க்கின்றாயா...!!!

வெள்ளந்தி வேஷங்கள்...
கலைந்துவிடப்...
போகிதன்றோ...
உள்ளொன்று ஏதோ...
துடிக்கிதே ஏன் இன்று...!!!

நித்திய சோதனைகள்...
நிம்மதியற்றுப்...
போகின்றனவே ...
நினைத்ததெல்லாம் ...
நிர்மூலமாகி...
வதைக்கின்றனவே...!!!

கற்பனைகள் கூட...
கைதியாகி விட்டனவே...
கலங்கரை...
விளக்குகள் கூட ...
அணைந்து...
திசைகள்...
மாற்றி விட்டனவே...!!!

மோகத்தில் வந்த...
அலைகள்...
முகம் சுழித்து..
சென்று விட்டனவே ...
நிலை தெரியாது...
அவள் மனமும்...
நிம்மதியற்றுப்...
போகின்றதே...
கனவுகள்...
கலைந்தது போல்...!!!

No comments:

Post a Comment