Sunday, March 24, 2013

தாலி மட்டும் மின்னுகின்றது...!!!






கை நீட்டி அணைக்க...
வேண்டிய கைகள்...
காமப் பூக்களாக ...
தேடி அலைகின்றதே...!!!

ஒரு நிமிடம்...
சிந்தை இழந்து...
மந்தைகளாக மானிடர்...
தடம் புரண்டு...
ஐயகோ என்ன...
வாழ்க்கையோ...
வாடுகின்றேன் ...
வழிகள் பற்றி எரிவதால்...
வதங்கியே சாகின்றேன்...!!!

கதைகளில் கூட...
நாவை சுட்டுக்கொள்ளாது...
வரும் வார்த்தைகள்...
என் மேனியை...
சுட்டெரிக்கின்றதே...!!!

படு பாவம்...
செய்து விட்டேனா...
பாவியிடம்...
சிக்கி விட்டேனா...
தினம் ஒரு சவால்...
முறியடிக்க...
முடியாது முறிகின்றேன்...!!!

கண்ணீர் துளிகளில்...
பன்னீர் தெளிக்கப்...-
பார்க்கின்றேன்...
வெந்நீராகி...
என்னையே....
பதம் பார்க்கின்றதே...!!!

முயலுக்கு...
மூன்று கால்கள்....
முரண்டு பிடிக்கும்...
மானிடனிடம்...
வாதம் செய்கின்றேன்...
எதனை பதிலாக...
தந்து இருப்பான்...
நினைத்தே ஜாகம்...
செய்கின்றேன்...!!!

என் விழிகளில்...
ஏதோ ஒரு வெளிச்சம்...
என்னை முன்னோக்கி...
அழைத்துச் செல்கின்றது...
அறியாத என்னினைவும்...
அலங்கோலங்களை...
அறியாது செல்கின்றதே...!!!

கரங்கள் கை நீட்டுகின்றது...
என் கண்ணீர் துளிகளில்...
தாலி மட்டும்...
நனைந்து மின்னுகின்றதே...!!!

என் உள்ளம் மட்டும் வாடி...
உருக்குலைந்து போவதில்...
என்ன நியாயமோ...
பெண்னாக பிறந்ததால்...
வந்த மாயமோ...!!!

No comments:

Post a Comment