கதிரவன்
கலங்கி நின்று
ஏதோ சொல்லவந்த
செய்தி கேட்டு...!!!
என்னவள்
வருகைக்காக
ஏக்கத்துடன்
நான் வாட...!!!
புன்முறுவல் ...
பூத்த வண்ணம்...
நங்கையவள்...
நாணம் கொள்ள...!!!
அவளோசை ...
போன திசை..
பொங்கித் தானே...
நானும் போக...!!!
வா என்று அழைக்கா...
வாடித்தான்...
அவள்...
போவதெங்கே...!!!
காலடி ஓசை...
அவள் காலடி ஓசை....
காரணம் சொல்லா...
கண்களின்....
சோகத்தை மட்டும்....
தெளிப்பதேன்....!!!
பாரத்தை....
சுமந்து வந்து...
பாதியில் விட்டுத்தான்...
போவதேன்....!!!
நிம்மதி....
பெருமூச்சுக்கள்...
நிதானமற்று...
நிர்க்கதியாகப்....
போவது தான் எங்கேயோ...!!!
பாவம் அவள்...
பருதவிக்கின்றாள்...
பாவி என்னை...
நட்பாக...
ஏற்றுக்கொண்டதால்...
தினம் துடிக்கின்றாள்...!!!
நான்....
தொலைத்த நட்பை....
தேடி அலைகின்றேன்...
நாகரீகமாக அவளிடம்...
சொல்லத் துடிக்கின்றேன்..
சாகும் வரை தொடரும்...
அவள் மேல்...
நான் வைத்த...
புனித நட்பு...!!!
இது கனவு....
இல்லையடி தோழி...
என் உள்ளத்தில்...
வந்த உண்மையின்
குமுறல்கள் தானடி தோழி...!!!
No comments:
Post a Comment