Wednesday, June 12, 2013

முட்டாள்கள் தினம்...!!!





தமிழன் தோன்றிய
காலத்திலேயே
பிறந்துவிட்ட
பழைய தினம்
காலங்காலமாக
தமிழனோடு
ஒட்டி உறவாடி
வாழ்ந்து காட்டியே
புதிய
அவதாரம் எடுத்து
சாதனை படைக்கும்
எங்கள் தினம்...!!!

தினம் தினம்
ஏமாந்து போவதில்
தமிழனைப் போல்
பெருமை கொள்பவன்
இவ்வுலகில் வேறு
எவரும் உண்டோ
இல்லை அவனை மிஞ்சி
ஏமாந்தவனை நீயும்
கண்டதும் உண்டோ...!!!

வாய்க்கரிசி போடவே
உன் தோளில் கைபோட்டு
அலைகினறனர் பலர்
நீயே கொண்டுபோய்
வாயையும் தோளையும்
கொடுத்து தலையை
சொறிகின்றாய்
காலங் காலமாகவே
உனக்குத்தான் தினம்
முட்டாள்கள் தினம்
வந்து போகின்றனவே
இன்று மட்டும் என்ன
புதிதாக யோசிக்கின்றாய்
முட்டாள் ஆனது போல்...!!!
[கவிஞர் இராஜேந்திரா]

No comments:

Post a Comment