Wednesday, June 12, 2013

மயங்கும் பொழுதே...!!!





மான் விழி கண்டேன்
மயங்கி விழுந்தேன்
உன்
பதுமையில் நானும்
பயமும் கொண்டேன்
காற்றுக்கள் பேசிய
வார்த்தைகள் கேட்டு
நானும் வியந்தேன்
உன் பெயரை மூச்சாக
சுவாசித்த பொழுது
மீண்டும் மீண்டும்
பிறந்தேன் உனக்காகவே...!!!

புதிதாக தினம்
புதுமை கொள்கின்றாயே
உன்னைப் படைத்தவன்
யார் மீது மோகம் கொண்டு
உன்னை புதுமையாக்கி
இவ்வுலகில்
தவழவிட்டானோ
என் கண் முன்னே
ஏன் தானோ
புரியாத புதிராகினேன்
உன்னால் நான் தானே...!!!

கவிஞர்கள் வந்து உன்
முகம் பார்த்துத் தானே
பேனா தேடுகின்றனர்
மைகள் தீர்ந்து
போவதால் தானோ
உன் கண்களின் கருவிழிகளை
தானம் கேட்கின்றனரோ
அவர்கள் தாகம்
தீர்த்திடவே உன்
கருமையை கடன்
கேட்கின்றனவோ...!!!

No comments:

Post a Comment