Friday, June 14, 2013

இருமனம்...!!!



நாளும் எதையோ
தேடுகின்றது
தினமும் மனதும்
வாடுகின்றது
ஒன்றை விட
மற்றொன்று
சுவையாகவே
உறவாடுகின்றதே...!!!

உள்ளம் மட்டும்
ஏக்கத்தில் கழிகின்றது
உண்மைகள்
புரியாமலேயே
மயக்கத்தில்
தடுமாறி
தவழ்கின்றதே...!!!

இக்கரைக்கு ஏனோ
அக்கரை
இனிக்கின்றததே
மனம் மட்டும்
பல வர்ணங்களாக
மாறிக்கொண்டதால்
தானோ...!!!

எத்தனை ஏக்கங்கள்
புகுந்து கொண்டதோ
இருமனம் எத்தனை
கொடுமைகளில்
புகுர்த்தி விடுகின்றதோ
யார் மனதை
யார் அறிவாரோ
நான் அறியேன்...!!!

No comments:

Post a Comment