Friday, June 14, 2013

காதல் பிரிவென்றால்...!!!





கண்ணும் கண்ணும்
பேசிய பாஷையில்
கண்ணீரை தெளித்துவிட்டு
எங்கோ ஒரு பயணம்
எதனைத் தாலாட்டப்
புறப்பட்டதோ
புண்ணியம் புனிதம்
என்று முணுமுணுத்த
வார்த்தைகள்
எங்கே தான்
தொலைந்து போனதோ ...!!!

துணைக்கு பிறையையும்
அழகுக்கு நிலவையும்
அழைத்து வந்தவர்கள்
இதயங்கள்
கானல் தோட்டத்து
கரும்பாகிப் போனதோ
கசப்புக்கு
விலையாகிப் போனதோ...!!!

மணித்துளிகளில்
மகுடங்களும்
மரத்துப் போனதா
நம் வாயில் வந்த
வார்த்தைகளும்
வெறுத்துப் போனதா
பிரிவு வந்து
சுகங்களை அள்ளித் தந்ததா
சுக்குநூறாக்கி விட்டு
மீண்டும் பயணிக்கின்றோம்
இதயங்களை நொருக்கத்தானே ...!!!

No comments:

Post a Comment