Friday, June 14, 2013

ஏன் பிறந்தேன்...!!!


கண்ணுக்குள்
கண்ணை வைத்து
ஏதோ ஒரு பாடம்
கவியின்
நெற்றியில் வந்து
என்ன தான் மோகம்...!!!

சித்திரம் வரைந்து
நினைவில்
ஒரு ஏக்கம்
நீங்காத கதைகள்
வந்து பேசிடும் தாக்கம்...!!!

வாயில்லா
பூச்சிகளின்
வார்த்தைகளின்
ஜாலம்
முடிவில்லா
வேதனைகள்
தந்து விடும் வேதம்...!!!

நானென்ன நீயென்ன
யாருக்குத் தான் தாகம்
யாரால் வந்த பாவம்...!!!

காலங்கள்
போதித்ததில்
நாம் எதனை
சாதித்தோம்
நயவஞ்சகர் உலகில்
நாயகர் யார் தானோ...!!!
.
நாளும் எதையோ
சாதிக்க துடிக்கின்றேன்
நாட்களும்
வெறுக்கின்றதே
பாவம் செய்து
பிறந்தேனா இல்லை
பாதை இல்லா பிறந்தேனா?...!!!

No comments:

Post a Comment