Friday, June 14, 2013

அணையாத நெருப்பு...!!!



அகலக்கால் பதித்து
அகப்பட்டுக்
கொண்ட உத்தமர்கள்
அண்ணார்ந்து பார்த்து
உலகை அளந்த
அற்புதர்கள்...!!!

நேற்று முடிந்ததை
இன்று
கணக்குப்பார்க்கும்
மேதைகள்...!!!

இயலாதவர்கள் மேல்
சவாரி செய்வதில்
சளைக்காத மானிடர்
எதற்கும் அஞ்சாது
கெஞ்சி நிற்கும்
கொஞ்சல்காரர்கள்...!!!

கோயிலும் சாமியும்
இவர்கள் வசம்
தோற்றுப்போகும்
சோம்பேறிகள்...!!!

முதுமை கொண்ட
மனிதர்கள்
முயல் பிடிக்கின்றனர்
மூன்று கால்களுடன்...!!!

முக்காடு போட்ட
தமிழர் மனம்
அலைபாயுதே
அடுத்தவன்
கை பிடிக்க...!!!

ஆண்டாண்டு காலம்
அடம்பிடித்து
அடிச்சுப்பிடித்தது
அவன் இவன்
கைகோர்க்கவா...!!!

தலைக்கு மேல் தண்ணீர்,
சான் போனாலென்ன
முழம் போனால் என்ன
தப்பித்தவர்களின்
மனங்களில்
அணையாது
அணையை முடியாதது...!!!

No comments:

Post a Comment