Wednesday, June 19, 2013

நிரந்தரமற்ற...!!!



எது தான்...
நிரந்தரம்...
எல்லாமே ஒரு...
சூனியம் தானே...!!!

எதுவுமே...
நிலைக்கவில்லையே...
நிம்மதி கூட...
தடுமாறுதே...
என்னவென்று...
புரியவில்லை...
ஏக்கத்தில் காலங்கள்...
மட்டும் கழிகின்றதே...!!!

வசந்தக் காற்றுக்கள்...
வழிமாறிப்...
போய்விடுகின்றனவே...
பாச நினைவுகள்...
தடுமாறி சிரிக்கின்றனவே...
என்ன காலமோ...
மனிதன் வாழ்வில்...
சோதனை தரும்...
போதனை காலங்களா...!!!

வார்த்தை இன்றி...
தவிக்கின்றேனே....
வாதம் செய்ய...
மனமின்றி துடிக்கின்றேனே...!!!

மனிதர்களிடம்...
மோதுவதை...
வெறுக்கின்றேனே...
வாழும் வரை....
கை குலுக்க தான்...
நினைக்கின்றேனே...!!!

என்ன தான்...
வாழ்க்கையடா...
தினம் தினம்...
ஏதோ ஒரு புழுக்கம்...
என்னை கொல்லுதே...!!!

எதுவுமே...
நிரந்தரமில்லையே...
எனக்குள் மட்டும் ஏன்...
இந்த போராட்டமோ...
வாழும் வரை...
மனிதனாக வாழ்ந்துவிட்டு...
போவோமே..
வாழும் வரைக்கும்...!!!

No comments:

Post a Comment