Wednesday, June 19, 2013

அன்புக்கு நான் அடிமை...!!!



ஏதோ புரியவில்லை...
விரோதியாகிலும்...
அவர் கஷ்டத்தில்...
துடிக்கும் பொழுது...
என் மனமும்...
மயங்கி...
துடிக்கின்றதே ...!!!

கொடுமைகள்...
மறக்க முடியவில்லை...
கொண்ட லட்சியம்..
துறக்க முடியவில்லை...
இருந்தும் ஏதோ...
ஒரு வலி என்னை...
துன்பப்படுத்துகின்றதே...!!!

பழக்கப் பட்ட....
வழிகளால்...
பரிதவிக்கின்றேனா...
இல்லை...
என் இதயமே...
மற்றவருக்காக....
துடிப்பதால்....
மயங்குகின்றேனா...
மாற்ற முடியவில்லை...
என் வழியை...
மாற்ற முடியவில்லை...!!!

இந்த உலகில்...
எதனைக் கண்டோம்...
எங்கே...
விரோதம் கொண்டோம்...
காற்றடைத்தை...
பைகளில்...
கர்வங்கள் தான் எதற்கோ...!!!

வாழும் வரைக்கும்...
நான் அடிமை தான்...
என்றும் அன்புக்கு...
அடிமையானவன்...
எனக்கு பிடித்ததும்...
அந்த வழியே...
அப்படியே...
வாழ்கின்றேன்...!!!

No comments:

Post a Comment