Friday, June 14, 2013

அவளுக்கு என்ன ஆச்சு...!!!



காலையிலே
மலர்கின்றாள்
மாலையிலே சுடுகின்றாள்...!!!

பாதையிலே
நடக்கின்றாள்
பதட்டத்தில் கதைக்கின்றாள் ...!!!

நித்தம்
என்னைக் கானாது
வெறி பிடித்து
பித்தாகின்றாள்...!!!

கண்டு விட்டால்
காயப்படுத்தி
விடுகின்றாள்
இதயத்தை தானே...!!!

ஏதோ போக்கில்
போனவனை
தனக்குள்
அடக்கிகொண்டவள்...!!!

தயங்கிய
போதெல்லாம்
அணைத்துக் கதை
பேசியவள்...!!!

இன்று அவளில்
ஒரு தடுமாற்றம்
இல்லை தனிமாற்றம்...!!!

என்னை
சோதித்துப்
பார்க்கின்றாளா இல்லை
துரத்தப் பார்க்கின்றாளா...!!!

மனதில்
ஒரு நெருடல்
என்னையறியாது
ஒரு ஏக்கம்...!!!

கற்பனை உலகில்
என்கதை
முடிந்துவிடுமோ
ஏன் இந்தக்
கலக்கம்
நினைத்துப் பார்க்க
முடியவில்லை
அவளின்றி என்பயணம்...!!!

No comments:

Post a Comment