Wednesday, June 19, 2013

நானும் மனிதன்...!!!



காலங்கள் ...
துரத்திய வேளைகளில்...
கண்ணீர்களும்...
கதைகளும்...
என்னை தேடியே...
தொடர்ந்ததே...!!!

எத்தனை வேசங்கள்...
எனக்குள் பிறந்து...
மறைந்ததே...
தினம் தினம் மீண்டும்...
பிறந்து கொண்டு தான்...
இருந்ததே...!!!

காலையில்...
எழுந்தவுடன்...
கனவுகள் மறந்து...
போடும்...
வேசங்கள் தான்...
எத்தனை எத்தனையோ...!!!

சுமைகள் வந்து...
சுதந்திரத்தை...
விழுங்கி செல்கின்றதே...
மனசுமைகள் கூட...
என்னை...
மாற்றத்...
துடிக்கின்றதே...!!!

பளுக்களில்...
வாழ்ந்து...
பழக்கப் பட்டவன்...
பாசத்தால் வந்த...
வடுக்களில் கூட...
என்னை...
பல தடவை...
தொலைத்து...
கண்ணீரில்...
குளிக்கின்றேனே...!!!

மனித வாழ்வோ...
மகத்தானது தான்....
எங்களை...
மறந்து வாழ்ந்து...
தொலைக்கின்றோம்...
வாழத் தெரியாத...
கனவுகளால்...!!!

நானும்...
மனிதன் தானே...
பயணம் செய்கின்றேன்...!!!

பாதைகள்...
கரடு முரடாக...
என்னை...
கவிழ்க்க பார்க்கின்றதே...
இருந்தும்...
தொடர்கின்றேன்...
முடிந்தவரை...
மனிதனாகவே...!!!

No comments:

Post a Comment