நனைந்து
மிதந்து வந்து
கண்ணில் ஓரு
வெளிச்சம் தந்தாயோ...!!!
பூட்டிய
கல் இதயத்தில்
உன்னிதளால் தான்
வஞ்சம் தீர்த்தாயோ...!!!
நேர்த்திக் கடன்கள்
தீர்க்கத்தான்
என் பக்கம்
மலரானாயோ...!!!
உதயம்
ஓய்ந்ததில்லை
உன் வரவு காணாமல்
தேய்ந்ததில்லை...!!!
தினம் ஒரு
மாறுதல்
அவளால்
வந்த ஆறுதல்...!!!
வயக்காட்டில்
புதுத் தளிர் போல்
என்ன
மினுமினுப்பு...!!!
திமிர் நடையும்
திகட்டாத
வதனமும்
உனக்கு மட்டும்
சொந்தமானதோ...!!
ஊரே
கும்மி அடிக்கின்றதே
உன்
வரவைக்கண்டு
ஊர்கோலமாய்...!!!
என்
வீட்டுக்கதவுகள்
உன்
வரவுக்காக
ஏங்கி தவிக்கின்றதே...!!!
சமையல் அறை
மகிழ்ச்சி
வெள்ளத்தில்
உன் கைப்பக்குவம்
காணத்தான்
துடிக்கின்றதே...!!!
புது நாத்தே
புது மாலை
கொண்டு வரும்
நாள் தான் எப்போ...!!!
No comments:
Post a Comment