Friday, January 24, 2014

சிதைந்த தோட்டங்கள்...!!!




பாசத்தில்
பெற்றவர்கள்
விழி மூடா
காத்தவர்கள்...!!!

எதிர்கால
கனவு கண்டு
இன்பத்தில்
வாழ்ந்தவர்கள்...!!!

எத்தனை
துயரம் மறைத்தே
எங்கள் உயரம்
காணத் துடித்தவர்கள்...!!!

நாம் தான்
என்ன செய்தோம்
நம்மை
பெற்றவர் மனம்
குளிர்ந்திடவே...!!!

பருவ வயதில்
பகுத்தறிவை
இழந்தோம்
காலக் கோளாறினால்
கருவறை மறந்தோம்...!!!

மாயக்
காதலை மட்டும்
மனதில் நிறுத்தி
பெற்றவரின்
கனவைத் தானே
புதைத்துக்
கொண்டோம் ...!!!

தீய
நடத்தையின்
சொந்தக்காரர்
ஆனோம்...!!!

வாழ்வென்னும்
அழகிய தோட்டத்தை
உணர்வுக்கு மட்டும்
அடிமையாக்கி
சிதைத்துக்
கொண்டோமே...!!!

No comments:

Post a Comment