Friday, January 24, 2014

அகராதி அவள்...!!!





எத்தனை புரிதல்
அவள்
முகங்ககளில் தான்
எத்தனை கவிகள் ...!!!

ஒவ்வொரு
வடுக்களும்
அவளுக்குள் மட்டும்
எப்படித்தான்
சுகமான சுமையாக
உரு மாறிக்
கொள்கின்றனவோ...!!!

ஊமையாகி
அவள்
உணர்ச்சிகள் மட்டும்
உறங்கிக்
கொள்கின்றனவே
உதிராத அவள்
வார்தைகள்
என்ன தான்
பேசிக்-
கொள்ளுமோ ...!!!

பதுமையான
அகராதி அவள்
வேதனைகளை
விழுங்கிக்கொண்டு
மாற்றுமொழியில்
மயங்க வைக்கின்ற
வித்தையை
எங்கேதான்
கற்றுக்கொண்டாளோ...!!!

அவள்
புன்னகை என்னும்
புது மொழியாள்
என் மனதில்
பூத்துவிட்ட
வாசனை மாறா
பூச்சரமும்
அவள் தானே ...!!!

No comments:

Post a Comment