தண்ணீர் தாகம்
எடுத்த பொழுது
மறந்த சோகம்
துளைத்தெடுத்தது...!!!
கண்ணீர் சுரந்து
அவள்
சென்ற வேளை
நெஞ்சம்
அடைத்த
பார்வை அன்றோ...!!!
வாழ்வும்
மரத்துப் போய்
வார்த்தையும்
பொய்யானதே...!!!
காற்றும்
திசை மாறி
கானல் ஆனதால்
கண்ணும்
சிவந்து போய்
குளம் ஆனதொ...!!!
கல்
நெஞ்சம் என்று
நான் கடிந்த போது
பார்வையாலே
அவள்
வாதம் வென்றது...!!!
சொல்ல
முடியாமல்
விக்கித்து
நின்றவளை
அவள்
கண்கள் வழியே
கண்டேன் நானும்...!!!
அவள் உள்ளம்
என்னிடம் மட்டும்
உள்ளது
உடம்பு மட்டும்
சென்றது
திரும்பி பார்த்து ஏதோ
முணுமுணுத்தபடியே ...!!!
No comments:
Post a Comment