Sunday, March 25, 2012

வாழ்க்கை




நிரந்தரமற்ற ...
நிம்மதியற்ற...
பூங்காக்கள்...!!!

குப்பைகளில் ...
முளை விடும்
காளான்கள்...
வாழவில்லையா...!!!

வாழ்வை...
கையிலே எடுத்து...
கனவு காண்கின்றோம்...
பல...
கோணங்களில்...
ஏன் தானோ...!!!

பகுத்தறிவு...
தொலைத்தே...
புழு ஆகின்றோம்...
புரியாத புதிராக!!!

எதனை...
சாதித்தோம்...
வாழ்வில்...
எதனை போதித்தோம்...!!!

முண்டியடித்து...
முன்னே போகத்...
துடிக்கின்றோம்...
முகவுகவுரை தேடியே....!!!

காலன் கைகள்....
குறி ...
வைப்பது தெரியாமலே...
ஆட்டம்...
போடுகின்றோம்...
காலத்தையும்...
தேடுகின்றோம்...!!!

நிம்மதி...
நிரந்தரமற்ற...
நீர்த் தடாகம்...
நீச்சல் அடிப்பவர்....
யார் தான்....
நிரந்தரமானவர்களோ...!!!

காலம்...
இட்ட கட்டளை...
கனவுகள் மட்டும்...
தொடர்கின்றது....
வாழ்க்கையாகவே...!!!

No comments:

Post a Comment