Tuesday, March 13, 2012

புரியாத புதிரே...!!!

புயலாகத்...
திரிந்த என்னை...
பூவாக...
மாற்றிய புதுமையே...!!!

நானாக...
மாறிய பொழுது...
நீயாகப்...
போகத் துடிப்பது...
சரிதானா...?
என்னவளே சொல்..
முறை தானா...!!!

காற்றின்....
திசையில்....
நான் சென்ற...
வேளையிலே...!!!

கடிவாளம் போட்டு...
கட்டிப் போட்டவளே...
நான்....
நின்ற பொழுது...
நீ போகின்றாய்...!!!

வேதனைகளை....
தந்து...
செல்கின்றாயா...
இல்லை...
எடுத்து செல்கின்றாயா?..!!!

உன்....
இதயத்தை....
கொன்று செல்கின்றாயா...
இல்லை...
கொண்டு செல்கின்றாயா...!!!

பதில்கள் இல்லா...
கேள்விகளுடன்....
பயணம் செய்கின்றேன்...
பதிலாக...
நீ...
என்னுள்ளத்தில்....
வாழ்வதால்...!!!

No comments:

Post a Comment