Sunday, March 11, 2012

எனக்குள் பூத்தவள்

எனக்குள்..
வேரூண்டி விட்ட...
புதுமைப் பெண்...!!!

பூத்துக் குலுங்கி...
என்னை அவளோடு...
அணைத்துக்கொண்ட...
அழகோவியம் ...!!!

இதயங்கள்...
மோதிய பொழுது....
இது தான்...
வாழ்க்கை என்று...
போதித்த...
அறிவுடையாள்...!!!

நித்தம் அவள்....
போதனை...
எனக்கோ...
தினம் தினம்...
சாதனை...!!!

அவள்...
விழிகள் பேசும்...
என்...
உதடுகள்...
கவி பாடும்...!!!

தினம் அவள்....
போடும் வேஷம்...
எனக்குள் ...
புதிதாகப் பிறக்கும்...
புதிய ராகம் ....!!!

காலையில்..
அவள்...
எழுதும் கடிதம்...
அது தான்....
என்னை....
வாழ வைக்கும்...
மந்திரம்...!!!

மீண்டும்...
பிறந்தேன்...
கவியோடு...
அவளுக்காகவே...!!!

No comments:

Post a Comment