Friday, March 30, 2012

பார்வை


பகுத்தறிவு...
பாதை மங்கிய பொழுது...
கை பிடித்து கவிதை சொன்னவள்!!!

காலங்களை...
எனக்கு போதனைகாளாக...
படைத்து விட்டவள்!!!

வீம்பு பண்ணி...
விளையாட்டாக என்னில்
மோதிப்பார்க்கும் தேவதை அவள்!!!

கள்ளம் கபடம்....
அறியாத பேதை அவள்..
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டவள்!!!

வசை பாடுபவர் முன்னே.....
என்னை திசை மாற்றிய...
என்னவள் அவள் தானே!!!

இன்றோ இதயத்தில்...
மட்டும் பூத்துவிட்டு...
என்னை தட்டுத் தடுமாற வைக்கின்றாளே!!!

No comments:

Post a Comment