Friday, March 30, 2012

ஏக்கம்


நானாக...
தேடிப்போய் இழுத்து வந்து
அடைத்தேன் என் இதயத்தில்
அவளை மறக்க முடியாத
ஒரு ஏக்கம்!!!

பாலை வனமாக...
நான் உணர்வதே
அவள் மௌனத்தில்
நான் சிதையும் தாக்கம் !!!

எத்தனை முறை....
என்னை எரித்துக்கொள்வேன்
என்னையே நான் மறந்தே!!!

காலம்...
இட்ட கட்டளையா
கனவில் மட்டும் நான்
படும் தண்டனையா ??!!!

தீயே...
நீ கூட துரோகம் செய்யாதே
என்னை எரித்துச் செல்
இல்லை அவளிடம் தூது செல்!!!

எரிந்து கொண்டு இருக்கும்...
என் இதயம்... தீயையும் எரிக்கும்
என்று உரத்துச் சொல்!!!

அவள்...
எனக்கு மட்டும் சொந்தம்
எனக்குள் சொந்தம்
இல்லையேல் இல்லை என் உள்ளம்!!!

No comments:

Post a Comment